புதன்கிழமை முதல் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதால் வாட்ஸ்அப் இந்திய அரசு மீது சட்டப் புகார் அளித்துள்ளது. தனியுரிமை பாதுகாப்பை உடைக்க கலிபோர்னியாவைச் சேர்ந்த பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப்பை இந்த விதிகள் கட்டாயப்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Survey
✅ Thank you for completing the survey!
அதாவது இந்த விதிமுறைகள் பேஸ்புக் மற்றும் இதர நிறுவனங்கள் வழங்கி வரும் பிரைவசி பாதுகாப்பை மீறும் வகையில் இருப்பதாக வாட்ஸ்அப் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில், வாட்ஸ்அப் தொடர்ந்து இருக்கும் வழக்கில் புது விதிமுறைகள் இந்திய அரசியலமைப்பின் தனியுரிமை கொள்கைகளுக்கு எதிராக இருக்கிறது என உயர்நீதிமன்றம் உத்தரவிட கோரியுள்ளது. தகவலை முதலில் உருவாக்கியவர் விவரங்களை அரசு கோரும் பட்சத்தில் அதனை வழங்க புது விதிமுறைகளில் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலியில் அனைத்து சாட்களும் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுவதால், அந்த விவரங்களை வழங்க முடியாது என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வாட்ஸ்அப் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. புது விதிமுறைகளை ஏற்க சமூக வலைதள நிறுவனங்களுக்கு 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.
இந்த வாரம், சமூக ஊடக தளமான ட்விட்டரின் அலுவலகத்தை காவல்துறையினர் அடைந்ததை அடுத்து மத்திய அரசுக்கும் சமூக ஊடக நிறுவனத்துக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்தது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile