EPFO பயனர்களுக்கு சந்தோஷமான செய்தி ஆட்டோ செட்டில்மென்ட் பணம் அதிகப்டச்சமாக 5 லட்சம் பணம் எப்படி எடுக்கலாம்

EPFO பயனர்களுக்கு சந்தோஷமான செய்தி ஆட்டோ செட்டில்மென்ட் பணம் அதிகப்டச்சமாக 5 லட்சம் பணம் எப்படி எடுக்கலாம்

எம்ப்லோயி ப்ரோவிடன்ட் பன்ட் ஒர்கனைசெசன் (EPFO) மெம்பர்களுக்கு ஒரு பெரிய செய்தி வந்துள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா, ஜூன் 24, 2025 செவ்வாய்க்கிழமை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, எளிதாக நிதி திரும்பப் பெறுவதற்காக வருங்கால வைப்பு நிதியின் (PF) ஆட்டோ க்ளைம் தீர்வு வரம்பை அதிகரித்துள்ளது என்று கூறினார். அதிகரிக்கப்பட்ட ஆட்டோ க்ளைம் தீர்வு லிமிட் பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

EPFO ஆட்டோ செட்டில்மென்ட் நன்மை என்ன ?

அறிக்கையின்படி, EPFO ​​அனைத்து முன்பணக் கோரிக்கைகளுக்கும் தானியங்கி உரிமைகோரல் தீர்வு வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது. முன்னதாக இந்த வரம்பு EPFO ​​மெம்பர்களுக்கு ரூ.1 லட்சமாக இருந்தது, இதனால் உடனடித் தேவைகளுக்கு நிதி பயன்படுத்தப்பட்டது. கொரோனா காலத்தில் 2020 ஆம் ஆண்டில் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அட்வான்ஸ்ட் ஆட்டோ செட்டில்மென்ட் தீர்வு மூலம் அறிமுகப்படுத்தியது, இதனால் உறுப்பினர்கள் எளிதாக பணம் எடுக்க முடிந்தது. ரூ.5 லட்சமாக அதிகரித்த லிமிட்டுடன் , அட்வான்ஸ் கோரிக்கைகள் இப்போதுஆட்டோமேட்டிக் தீர்வு மூலம் இருக்கும் என்றும், இது சமர்ப்பித்த மூன்று நாட்களுக்குள் அவற்றைச் செயல்படுத்தும் என்றும்

EPFO ​​தெரிவித்துள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட வரம்பு மற்றும் நிதிகளை விரைவாக அணுகுவது, உறுப்பினர்கள் மிகப்பெரிய தேவையின் போது நிதி உதவியைப் பெற உதவும்.

ஆட்டோ கிளைம் செட்டில்மென்ட் எப்படி வேலை செய்கிறது?

தானியங்கி உரிமைகோரல் தீர்வு அமைப்பு மூலம் தானியங்கி மட்டத்தில் செயல்படுகிறது, மனித தலையீடு இல்லாமல். இது விரைவான திருப்பத்தையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்கிறது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இது இந்தியாவில் உள்ள அனைத்து சம்பளம் பெறும் ஊழியர்களுக்கும் கிடைக்கும் ஓய்வூதிய சலுகைத் திட்டமான ஊழியர் வருங்கால வைப்பு நிதியை (EPF) நிர்வகிக்கிறது.

இதையும் படிங்க:PAN card யில் இருக்கும் போட்டோ தவறா மற்றும் நீங்கள் உங்களின் அசிங்கமான போட்டோவை மாற்றலாம் எளிதாக

2024-25 நிதியாண்டில், EPFO ​​ஆட்டோ தீர்வு மூலம் 2.34 கோடி முன்பண உரிமைகோரல்களைச் செயல்படுத்தியுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 161 சதவீத வளர்ச்சியாகும். குறிப்பிடத்தக்க வகையில், 2024-25 ஆம் ஆண்டில் அனைத்து முன்பண உரிமைகோரல்களில் 59 சதவீதம் தானியங்கி முறையில் தீர்க்கப்பட்டன. 2025-26 நிதியாண்டின் முதல் 3 மாதங்களுக்குள், EPFO ​​இதுவரை 76.52 லட்சம் உரிமைகோரல்களைத் தானாகத் தீர்த்து வைத்துள்ளது.

வீட்டிலிருந்தபடி ஆட்டோ க்ளைம் மூலம் பணத்தை எப்படி எடுப்பது

  • முதலில் EPFO யின் அதிகாரபூர்வ வெப்சைட் http//www.epfindia.gov.in யில் செல்லவும்.
  • இங்கு நீங்கள் உங்களின் Online service யில் சென்று proceed for Online Claim யில் க்ளிக் செய்யவேண்டும்
  • இப்பொழுது நீங்கள் Online service யில் சென்று Proceed for online Claim யில் க்ளிக் செய்ய வேண்டும்.
  • இது நீங்கள் Advance Form19,31,10C (இதில் முக்கியமான தகவல் நிரப்பவும்) இதில் தேர்டுக்கப்பட்ட தகவலை நிரப்பவும்.
  • இதில் என்ன டாக்யுமென்ட் தேவைபடுகிறதோ அதை அப்லோட் செய்யவும்.
  • அதன் பிறகு இப்பொழுது பேங்க் அக்கவுன்ட் வெரிபை செய்து Form சப்மிட் செய்ய வேண்டும்
  • ஆட்டோ செட்டில்மென்ட் செயல்முறையின் கீழ் சிஸ்டம் தானாகவே களும் ப்ரோசெஸ் நடைபெறும், இந்த முழு செயல்பாடும் ID சிஸ்டம் யின் அடிபடையில் இருப்பதால், இதில் க்ளைம் 3-4 பணம் நேரடியாக பணம் அக்கவுண்டில் வந்து சேரும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo