இந்தியாவில் மீண்டும் Samsung Galaxy Fold அக்டோபர் 11 விற்பனைக்கு வருகிறது.

இந்தியாவில் மீண்டும் Samsung Galaxy Fold அக்டோபர்  11 விற்பனைக்கு வருகிறது.

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் இதன் முதல் விற்பனையின் போது முப்பது நிமிடங்களில் 1600 கேலக்ஸி ஃபோல்டு யூனிட்களை விற்பனை செய்து அசத்தியது. அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற்ற விற்பனையை தொடர்ந்து அக்டோபர் 11 ஆம் தேதி மீண்டும் முன்பதிவு நடைபெற இருக்கிறது.

இந்தியாவில் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. சாம்சங்கின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 7.3 இன்ச் டிஸ்ப்ளே, ஆறு கேமராக்கள், 12 ஜி.பி. ரேம் மற்றும் 512 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது. 

புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு ஒரு வருடத்திற்கான கேலக்ஸி ஃபோல்டு பிரீமியர் சர்வீஸ் வழங்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு 12 ஜி.பி. + 512 ஜி.பி. மெமரி மாடல் விலை இந்தியாவில் ரூ. 1,64,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிரீமியம் காஸ்மோஸ் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. 

கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி பட்ஸ் ஹெட்போன்களும் வழங்கப்படுகின்றன. இத்துடன் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ள இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளேவுக்கான பாதுகாப்பு சலுகை ரூ. 10,500 விலையில் வழங்கப்படுகிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo