WhatsApp யூசர்நேம் அம்சத்தில் அரசின் அதிரடி கண்காணிப்பு, ஆன்லைன் பிராட் அதிகரிக்கலாம்

HIGHLIGHTS

WhatsApp இன்னும் சில நாள்களில் Username அம்சத்தை கொண்டு வரும்

இந்த அம்சமானது போன் நம்பர் ஷேர் செய்ய வேண்டாம் என நினைப்பவர்களுக்கு

இந்த புதிய அம்சம் இந்திய அரசின் கவனத்தையும் ஈர்த்துள்ளது

நீங்கள் ஒருவருக்கு WhatsApp யில் யில் உங்கள் மொபைல் நம்பர் காமிக்காமல் சேட் (Chat) செய்ய வேண்டும் என நினைத்தால், இந்த செய்து உங்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும். WhatsApp இன்னும் சில நாள்களில் Username அம்சத்தை கொண்டு வரும், இந்த அம்சமானது போன் நம்பர் ஷேர் செய்ய வேண்டாம் என நினைப்பவர்களுக்கு இது பெஸ்ட்டாக இருக்கும் அதாவது, பயனர்கள் வெறும் தங்களின் போன் நம்பர் வைத்து சேட் செய்ய முடியும், இருப்பினும், இந்த புதிய அம்சம் இந்திய அரசின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆன்லைன் மோசடிகள் மற்றும் ஆன்லைன் ஏமாற்று வேலைகளுக்கு இது புதிய வழிகளை உருவாக்காது என்பதை உறுதிப்படுத்த, மத்திய அரசு இந்த அம்சத்தை முழுமையாக ஆய்வு செய்யவுள்ளது.

WhatsApp யின் புதிய Username அம்சம் என்றால் என்ன?

பயனர்கள் தங்களின் மொபைல் எண்ணுக்குப் பதிலாக, ஒரு தனித்துவமான பயனர்பெயரைப் பயன்படுத்தி தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள அனுமதிக்கும் புதிய பயனர்பெயர் முறையை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்துகிறது. குறிப்பாக, அறிமுகமில்லாத நபர் அல்லது குழுவுடன் தொடர்பு கொள்ள வேண்டிய சூழ்நிலைகளில் தனியுரிமையை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.

நிறுவனத்தின் கூற்றுப்படி, பயனர்பெயரை உருவாக்குவது முற்றிலும் விருப்பத்திற்குட்பட்டதாக இருக்கும். பயனர்கள் தங்களின் பயனர்பெயர்களைப் பிற்காலத்தில் மாற்றிக்கொள்ளவோ ​​அல்லது நீக்கவோ முடியும். இந்த அம்சம் அனைத்துப் பயனர்களுக்கும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.

அரசு இந்த அம்சத்தை ஸ்பெஷலாக கண்காணிப்பது எதற்கு?

இந்தியாவில் சில காலமாகவே ஆனலின் மோசடி அதிக அளவு பெருகி கொண்டே போகிறது, அதில் WhatsApp மூலம் அதிக மோசடி நடைபெறுகிறது எனவே தற்பொழுது யூசர்நேம் அம்சத்தின் மூலம் மேலும் ஆன்லைன் மோசடி அதிகரிக்கலாம் அதாவது ஒருவரின் மொபைல் நம்பர் வைத்து ட்ரேக் எளிதாக செய்ய முடியும், ஆனால் இப்பொழுது நம்பரை மறைக்கும்போது மேலும் ஆபத்து அதிகரிக்கலாம்.

அரசு வட்டாரங்களின்படி, போலி அக்கவுண்ட்கள் , ஆள்மாறாட்டம் மற்றும் சைபர் குற்றங்களைத் தடுப்பதற்கான வாட்ஸ்அப்பின் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்த விசாரணை ஆராயும். இந்த ஆய்வின்போது ஏதேனும் கடுமையான குறைபாடுகள் கண்டறியப்பட்டால், மெட்டா நிறுவனத்திற்கு அறிவிப்பு அனுப்பப்படலாம்.

இந்த புதிய சிஸ்டம் எப்படி வேலை செய்யும்

WhatsApp யின் படி யூசர்நேம் 3 லிருந்து 35 கேரக்ட்டர் வரை இருக்க வேண்டும், குறிப்பிட்ட சில முக்கியப் பொதுப் பிரமுகர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்கள், வேறு யாரும் அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் பாதுகாக்கப்படும்.

அந்த நிறுவனம், விருப்பத் தேர்வாக ‘Username Key’ ஒன்றையும் வழங்கத் திட்டமிட்டுள்ளது. இது, பயனர்கள் தாங்கள் நம்பும் நபர்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரு சிறிய நம்பர் கோடாக இருக்கும். போலி அக்கவுண்ட்கள் மற்றும் ஆள்மாறாட்டக்காரர்களுக்கு எதிராகக் கூடுதல் பாதுகாப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

முழுமையான என்கரிப்ஷன் அதாவது பாதுகாப்பு முன்பைப் போலவே தொடரும் என்றும், தனிப்பட்ட மெசேஜ் பாதுகாப்பாக இருக்கும் என்றும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது?

இந்த அம்சம் ப்ரைவசி மேம்படுத்தினாலும், அது சைபர் குற்றவாளிகளுக்கு ஒரு புதிய வாய்ப்பையும் வழங்கக்கூடும் என்று டிஜிட்டல் பாதுகாப்பு வல்லுநர்கள் நம்புகிறார்கள். ஒரு மோசடிக்காரர், பிரபலமான நபர், பேங்க், நிறுவனம் அல்லது அரசாங்க அமைப்பை ஒத்த ஒரு பயனர்பெயரை உருவாக்கினால், அது மக்களை ஏமாற்றுவதை எளிதாக்கிவிடும்.

சில வல்லுநர்கள் டெலிகிராமை உதாரணமாகக் காட்டியுள்ளனர். அங்கு, யூசர்நேம் அடிப்படையிலான அமைப்பு தவறாகப் பயன்படுத்தப்பட்டு, ஏராளமான போலி அக்கவுண்ட்கள் உருவாக்கப்பட்டு மக்கள் ஏமாற்றப்பட்டனர். இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய வாட்ஸ்அப் சந்தையில், வலுவான மோசடி தடுப்பு அமைப்புகள் மிக முக்கியமானதாக இருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இதையும் படிங்க:WhatsApp Usernames அம்சம் வருகிறது, உங்கள் பெயரை எப்படி செட் செய்வது?

பொதுப் பயனர்கள் மீது என்ன தாக்கம் ஏற்படும்?

இந்த அம்சம் பாதுகாப்பாகச் செயல்படுத்தப்பட்டால், பயனர்களுக்குப் பல நன்மைகளை வழங்கக்கூடும். க்ரூப் சேட்கள், பிஸ்னஸ் கான்வேர்செஷன் மற்றும் புதிய நபர்களுடன் தொடர்பு கொள்ளும்போது போன் நம்பர்கள் மறைக்கப்பட்டிருக்கும், இது ப்ரவசியை மேம்படுத்தும்.

இருப்பினும், பயனர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். அறிமுகமில்லாத பயனர்பெயர்களில் இருந்து வரும் செய்திகளை நம்புவதற்கு முன், அவர்களின் அடையாளத்தைச் சரிபார்ப்பது அவசியம். சந்தேகத்திற்கிடமான கணக்குகளைக் கண்டால், அவற்றை உடனடியாகத் தடுப்பது அல்லது புகாரளிப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :