New rule (
New rule: இன்று ஜூலை 1 என்பது நமக்கு அனைவருக்கும் தெரிந்ததே, ஆனால் இன்று முதல் இந்தியா முழுவதும் பல மாற்றங்கள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது அதில் முக்கியமாக EPF அக்கவுன்ட் ஹோல்டர், ஆதார், பாஸ்போர்ட் வின்னப்பத்தாரர்கள் மற்றும் வருமான வரி (income tax) செலுவோர், இது மட்டுமில்லாமல் LPG மற்றும் PNG யிலும் கனெக்ஷன் போன்றவற்றிக்கு பல ரூல் மாற்றப்பட்டுள்ளது இவை அனைத்தும் அரசின் அதிகாரபூவ அறிவிப்பாகும் அவை என்ன என்ன என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.
2026 ஜூலை 1 முதல் ஆதார் வைத்திருப்பவர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணம் கிடைக்கவிருக்கிறது. இந்திய தனி அடையாள ஆணையம் (UIDAI), 2026 ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரை, ஆதார் மொபைல் ஆப் மூலம் ஈமெயில் முகவரிகளைப் அப்டேட் செய்வதற்க்கு கட்டணம் இல்லை என்று அறிவித்துள்ளது. தற்போது, ஈமெயில் அக்கவுண்ட்களை அப்டேட் செய்ய ₹75 (ஜிஎஸ்டி உட்பட) கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆதார் உடன் ஈமெயில் முகவரி இணைக்கப்படாதவர்கள் அல்லது தங்களின் பழைய ஈமெயில் முகவரியை மாற்ற விரும்புபவர்கள் இந்த வசதியை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இது ஆதார் பதிவுகளை மேலும் பாதுகாப்பாகவும், அப்டேட் செய்த நிலையிலும் வைத்திருப்பதை உறுதி செய்யும் என அரசு நம்புகிறது. மேலும் இந்த ஆதார் இலவச அப்டேட் 6 மாதம் வரை இருக்கும் அதாவது ஜூலை 1 2026 லிருந்து டிசம்பர் 31 , 2026 வரை இருக்கும்
வருமான வரி செலுவோர் அதாவது Income Tax Returns (ITR) தாக்கல் செய்ய (ITR-1 மற்றும் ITR-2) FY 2025-26-க்கான காலக்கெடு ஜூலை 31, 2026 வரை விதிக்கப்பட்டுள்ளது, இந்த தேதியை தவற விடுவோர்களுக்கு காலதாமதம் ஆகும் பொது ரூ,5,000 பைன் கட்டணம் வசூலிக்கப்படும் அதுவே ஒரு வருடத்திற்க்கு நீங்கள் 5 இலட்சத்திற்கு சம்பாதிப்போர் ரூ, 1000 பெனளிட்டியாக வசுளுக்கப்படும்.
இதை தவிர உங்களின் வருமானதிற்க்கு ஏற்றவாறு tax regimes தேர்ந்தெடுப்பது அவசியமாகும்
நீங்கள் புதிய அல்லது அப்டேட் பாஸ்போர்ட் செய்ய பெறத் நினைத்தால் , ஜூலை 1 ஆம் தேதி முதல் நீங்கள் கூடுதலாகச் பணம் தர வேண்டியிருக்கும். வெளியுறவு அமைச்சகம், பாஸ்போர்ட் (திருத்த) விதிகள், 2026-யின் கீழ் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. 36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட்டிர்க்கான கட்டணம் முன்பு ₹1,500 ஆக இருந்தது, இப்போது ₹2,500 ஆக உயர்ந்துள்ளது. அவசர பாஸ்போர்ட்டிக்கு (36 பக்கங்கள்) விண்ணப்பிப்பதற்கான கட்டணம் முன்பு ₹3,500 ஆக இருந்தது, இப்போது ₹5,000 ஆக உயர்ந்துள்ளது. 60 பக்கங்கள் கொண்ட சாதாரண பாச்போர்ட்டிர்க்கான கட்டணம் ₹3,500 ஆகும். 60 பக்கங்கள் கொண்ட அவசர பாஸ்போர்ட்டிர்க்கான கட்டணம் ₹6,000 ஆகும்.
இந்திய ரிசர்வ் பேங்க் (RBI), ‘பொறுப்பான பைனான்சியல் நடத்தை’ என்பதன் கீழ், ஜூலை 1, 2026 முதல் ஒரு புதிய, கடுமையான கட்டமைப்பைச் செயல்படுத்துகிறது. பேங்க் ஊழியர்கள் அல்லது முகவர்கள், கஸ்டமர்களுக்கு தெரிவிக்காமல் இன்சூரன்ஸ் திட்டங்கள் அல்லது பிற நிதித் பொருட்களை விற்பனை செய்து அவர்களைத் தவறாக வழிநடத்துவது வழக்கம். இனி, தவறான விற்பனை(mis-sold) நிரூபிக்கப்பட்டால், பேங்க் கஸ்டமர்களின் முழுத் தொகையையும் திருப்பிக் கொடுக்கவும், ஏற்பட்ட இழப்பிற்கு ஈடுசெய்யவும் கடமைப்பட்டிருக்கும்.
SBI மற்றும் HDFC கிரெடிட் கார்டுகளில் ஜூலை 1, 2026 முதல் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, PURPLE மற்றும் SELECT BLACK போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட PhonePe SBI கிரெடிட் கார்டுகளுக்கான ரிவார்டு பாயிண்ட்ஸ் திட்டத்தைத் திருத்தியமைக்கிறது. புதிய விதிகளின்படி, ரிவார்டு பாயிண்ட்ஸ் பெறுவதற்கான லிமிட்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. சில ட்ரேன்ஸ்செக்ஷன்கள் இந்தப் லிஸ்ட்டிலிருந்து விலக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், HDFC பேங்க் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் முந்தைய காலாண்டில் குறைந்தபட்சம் ₹60,000 செலவு செய்திருந்தால், இனி ஒவ்வொரு காலாண்டிற்கும் மூன்று இலவச உள்நாட்டு விமான நிலைய ஓய்வறை அணுகல்களைப் பெறுவார்கள்.
இதையும் படிங்க உங்கள் பழைய போனை செக்யூரிட்டி கேமராவாக மாற்ற ஈசியான வழி
புதிய மற்றதின் படி கேஸ் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் LPG சிலிண்டர் விலைகளை மறுபரிசீலனை செய்கின்றன. மேற்கு ஆசியாவில் நிலவும் பதட்டங்கள் மற்றும் எரிசக்தி சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக, கடந்த சில மாதங்களாக LPG விலைகளில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஜூன் 1 ஆம் தேதி, ஒரு வர்த்தக LPG சிலிண்டரின் விலை ₹53.50 உயர்த்தப்பட்டது. எனவே, ஜூலை 1 ஆம் தேதியும் விலைகளில் மாற்றம் ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது. விலைகள் அதிகரித்தால், அது ஹோட்டல்கள், உணவகங்கள், சிறு பிஸ்னஸ் மற்றும் சாதாரண பயனர்களையும் பாதிக்கக்கூடும்.