பயனர்களை குஷி படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் பல புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

பயனர்களை குஷி படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் பல புதிய வசதி  கொண்டு வரப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது பயனர்கள் அவர்களின் தனிப்பட்ட விவரங்களை இயக்குவதற்கென கூடுதல் வசதிகளை வழங்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் பயனர் விவரங்கள் மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்ளப்படுவதை இனி வாடிக்கையாளர்கள் தீர்மானிக்க முடியும்.

"பயனர்கள் எங்களிடம் பகிர்ந்து கொள்ளும் விவரங்களை நாங்கள் பாதுகாப்பது முக்கியமான விஷயம் ஆகும். இதேபோன்று பயனர்கள் பகிர்ந்து கொள்ளும் விவரங்களை இயக்க அவர்களுக்கு அதிகளவு வசதியை வழங்க வேண்டும்," என இன்ஸ்டாகிராம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இயக்க இன்ஸ்டாகிராமில் செட்டிங்ஸ் — செக்யூரிட்டி — ஆப்ஸ் மற்றும் வெப்சைட்ஸ் ஆப்ஷன் சென்று எந்தெந்த மூன்றாம் தரப்பு சேவைகள் பயனர் விவரங்களை இயக்குகின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இத்துடன் மூன்றாம் தரப்பு சேவை பயனர் விவரங்களை கோரும் போது அவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் மேம்பட்ட ஆத்தரைசேஷன் ஸ்கிரீன் இன்ஸ்டாகிராம் செயலியில் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. 

"எந்தெந்த விவரங்களை மூன்றாம் தரப்பு கோருகிறது என்பதை தெரிவிக்கும் வகையில், மேம்பட்ட ஆத்தரைசேஷன் ஸ்கிரீனினை அறிமுகம் செய்ய இருக்கிறோம். இதனை அனுமதிக்கவும், நிராகரிக்கும் வசதி நேரடியாக ஆத்தரைசேஷன் ஸ்கிரீனிலேயே வழங்கப்படும்," என இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo