பேஸ்புக் மெசஞ்சர் போர்வர்டிங் வலிமிட்டை ரம்பை அதிகரித்துள்ளது, இப்போது பயனர்கள் ஒரு நேரத்தில் எந்த ஐந்து நபர்களுக்கும் அல்லது குழுவிற்கும் மட்டுமே ஒரு செய்தியை அனுப்ப முடியும். புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துவதன் நோக்கம் தவறான செய்திகளைத் தடுப்பதாகும். 2018 ஆம் ஆண்டில், பேஸ்புக் இந்தியாவில் வாட்ஸ்அப்பில் இதேபோன்ற லிமிட்டை விதித்தது, இது கடந்த ஆண்டு ஜனவரி வரை உலக சந்தையில் நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில், ஏப்ரல் மாதத்தில், வேகமாக அனுப்பப்பட்ட செய்திகளை ஒரே சேட்க்கு அனுப்புவதை வாட்ஸ்அப் மட்டுப்படுத்தியது. IOS சாதனங்களில் லோக் திறன் உள்ளிட்ட புதிய தனியுரிமை அம்சங்களை மெசஞ்சர் பயன்பாடு சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Survey
✅ Thank you for completing the survey!
பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தை பாதுகாப்பான ஒன்றாக உருவாக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் பேஸ்புக் மெசஞ்சர் செயலிக்கு புது அப்டேட் வெளியிடப்பட்டு உள்ளது.
புது நடவடிக்கை விரைவில் நடைபெற இருக்கும் அமெரிக்க மற்றும் நியூசிலந்து தேர்தல் மற்றும் தற்போதைய கொரோனாவைரஸ் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக பேஸ்புக் தெரிவித்து இருக்கிறது.
இந்த அப்டேட் ஒரு குறுந்தகவலை அதிகபட்சம் ஐந்து பேருக்கு மட்டுமே ஃபார்வேர்டு செய்ய அனுமதிக்கிறது. இவ்வாறு செய்யும் போது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்ட போலி விவரங்கள் மற்றும் தவறான தகவல்கள் பரவுவதை குறைக்க முடியும் என பேஸ்புக் மெசஞ்சரின் ஜே சலிவன் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் கொரோனாவைரஸ் பற்றிய உண்மையான தகவல்களை அறிந்து கொள்ள கொரோனாவைரஸ் கம்யூனிட்டி ஹப் பயன்படுத்தவும் பயனர்களுக்கு பேஸ்புக் கேட்டுக் கொண்டுள்ளது. இதில் கொரோனாவைரஸ் பாதிப்பு பற்றிய விவரங்களை கொண்டுள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile