Annam AI (2)
விவசாயிகளுக்கான பல வகையான ஆப் இருக்கிறது அதில் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமாக இருக்கிறது அதில் வானிலை பற்றி தெரிந்து கொள்ள ஒரு ஆப், விவசாயத்தை பற்றி மிக சிறந்த அட்வைஸ் பெற என ஒவ்வின்றுக்கும் தனி தனி ஆப் டவுன்ட்லிட் செய்ய வேண்டி இருக்குக்கிறது. மேலும் மாறி வரும் வானிலை ஒவ்வொரு முறையும் வெவ்வேறு ஆப பார்க்குவது என்பது கடினமாகும்
IIT Ropar உடன் சேர்ந்து ANNAM.A என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஒரு ஆப் கொண்டு வந்துள்ளது இதன் மூலம் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் டெக்நோலாஜி பயன்படுத்தி அணைத்து தகவலையும் பெற முடியும் இதில் (NABARD, ICRISAT, MSSRF) போன்ற பயனை பெறலாம். இதன் மூலம் விவசாயம் கணிப்பாக இல்லாமல், முழுக்க முழுக்க டேட்டாவின் அடிபடையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பற்றி முழு தகவல் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
டாக்டர் புஷ்பேந்திர சிங், அன்னம்.ஏஐ (ANNAM.AI) என்பது IIT ரோபரில் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு பிரத்யேக ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் மையம் என்று விளக்கினார். நாட்டின் விவசாயத்தில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் ஒரு “திறன்மிகு விவசாய முறையை” உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இது விவசாயத்தை மேலும் அறிவியல் பூர்வமானதாகவும், பாதுகாப்பானதாகவும், லாபகரமானதாகவும் மாற்றுவதற்காக ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் , டேட்டாக்கள் மற்றும் விவசாய நிபுணர்களின் ஆலோசனைகளைப் பயன்படுத்துகிறது.
ANNAM.AI-யின் கிருஷி AI-யின் செயல்படும் முறை முற்றிலும் மாறுபட்டது. தற்போதுள்ள வேளாண் ஆப்களுடன் ஒப்பிடுகையில், கிருஷி AI பல்வேறு மூலங்களிலிருந்து டேட்டாகளைச் சேகரித்து, சென்சார் ஃபியூஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயிகளுக்குத் துல்லியமான ஆலோசனைகளை வழங்குகிறது. இது 1 முதல் 5 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் வெப்பநிலை, காற்று, ஈரப்பதம் மற்றும் மழைப்பொழிவு குறித்த துல்லியமான தகவல்களை வழங்குகிறது. 5 மில்லியனுக்கும் அதிகமான படங்களின் அடிப்படையில், பயிர்களைப் பாதிக்கும் பூச்சிகளையும் நோய்களையும் இந்த AI உடனடியாக அடையாளம் காணும். சேட்லைட் போட்டோட்டகள் மற்றும் பண்ணையில் வானிலை நிலையங்களின் டேட்டாகளை ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
வயல்வெளிகளில் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஸ்வான் வானிலை நிலையங்களில் ஒரு திறன்மிகு ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் சிப் பொருத்தப்பட்டுள்ளது. கிராமத்திலோ அல்லது வயல்களில் இன்டர்நெட் வசதி இல்லாவிட்டாலும், இது டிவைஸில் லோக்கல் வானிலையைத் துல்லியமாகக் கணிக்க முடியும்.
ACE சாட்பாட், அதாவது அன்னம் சாட் என்ஜின், இந்தி, பஞ்சாபி, மராத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் செயல்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்களது சொந்த மொழியில் இந்த ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் உடன் பேச முடியும்.
ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் இன்றைய வானிலையைக் கணிப்பது மட்டுமல்லாமல், இது மெஷின் லேர்னிங் உதவியுடன், கடும் வெப்பம் அல்லது பூச்சித் தாக்குதல்கள் குறித்து மூன்று முதல் ஏழு நாட்களுக்கு முன்பே விவசாயிகளை எச்சரிக்கவும் செய்கிறது. இது, விவசாயிகள் தங்கள் பயிர்களைச் சேதத்திலிருந்து பாதுகாக்கவும், உரம் மற்றும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும் உதவுகிறது.