FLIPKART மற்றும் UBER சேர்ந்து மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கும்.
UBER நிறுவனம் ப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்ய இருக்கிறது.
UBER நிறுவனம் ப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்ய இருக்கிறது. முன்னதாக உபெர் நிறுவனம் பிக் பாஸ்கெட் உடன் இணைந்து மக்களுக்கு தேவையான பொருட்களை விநியோகம் செய்து வருகிறது.
முந்தைய பிக் பாஸ்கெட் டெலிவரிக்களை போன்றே புதிய கூட்டணியிலும் உபெர் நிறுவனம் அரசு விதிமுறைகளை முழுமையாக பின்பற்றும் என தெரிவித்துள்ளது. சேவையில் பங்கேற்கும் அனைத்து ஓட்டுனர்களும் அதிக பாதுகாப்பு மற்றும் சுகாதார வழிமுறைகளை சரியாக பின்பற்றுவர் என உபெர் தெரிவித்துள்ளது.
இந்த சேவைக்கென எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது என எபெர் தெரிவித்துள்ளது. இந்த சேவையின் மூலம் கிடைக்கும் வருவாய் முழுக்க ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும் என உபெர் தெரிவித்து இருக்கிறது.
முதறகட்டமாக இரு நிறுவனங்கள் கூட்டணி அமைத்திருக்கும் சேவை டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களில் அமலாகிறது. விரைவில் மற்ற நகரங்களிலும் இது விரிவுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுபற்றி இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
தற்சமயம் இந்தியாவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-க்கும் அதிகம் ஆகும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile