புதிய மொபைல் போன் வாங்க விவோவின் புதிய வசதி.
புதிய திட்டம் மே 12 ஆம் தேதிக்குள் முழுமையாக அமலாகிவிடும் என விவோ இந்தியா தெரிவித்துள்ளது
புதிய மொபைல் போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கென புதிய திட்டத்தை விவோ நிறுவனம் துவங்கி உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் வீட்டுக்குள் இருந்து கொண்டே புதிய போன் வாங்கிக் கொள்ள முடியும். நாடு முழுக்க பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் ஊரடங்கின் போது சில தளர்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், விவோ புதிய திட்டம் அமலாகி இருக்கிறது.
விவோ நிறுவனத்தின் புதிய திட்டத்தின் படி மொபைல் போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களின் சந்தேகங்களை விவோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலோ அல்லது விவோ அதிகாரப்பூர்வ வலைதளங்களில் கேட்க முடியும். வாடிக்கையாளர்கள் சந்தேகங்களுக்கு விவோ அதிகாரி பதில் அளித்து, புதிய போன் வாங்குவதற்கான உதவியை வழங்குவர்.
எனினும், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலும், ஊரடங்கு நிறைவுற்ற பின்பும் பல வாடிக்கையாளர்கள் வெளியில் வர தயக்கம் காட்டலாம். இதன் காரணமாகவே புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கமான வியாபாரத்தை நடத்த முடியும் என விவோ நிறுவனத்தின் நிபுன் மரியா தெரிவித்தார்.
எஸ்எம்எஸ் சார்ந்த கனெக்டிவிட்டி மூலம் இயங்கும் புதிய திட்டம் மே 12 ஆம் தேதிக்குள் முழுமையாக அமலாகிவிடும் என விவோ இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இன்றும் ஆஃப்லைன் மூலமாகவே புதிய மொபைல் வாங்க நினைக்கின்றனர்.
ஏதேனும் காரணத்திற்காக வெளியில் வராமல் புதிய போன் வாங்க நினைப்போருக்காக புதிய திட்டம் துவங்கப்பட்டு இருக்கிறது. வெளியில் சென்று புதிய போன் வாங்க நினைப்போரும் அவ்வாறு செய்ய முடியும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile