மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விரைவில் மூன்று புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் ஒரு ஸ்மார்ட்போன் அதிநவீன தோற்றம் கொண்டிருக்கும் என்றும் இதில் பிரீமியம் அம்சங்கள் வழங்கப்படும் என்றும் இது பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது.
Survey
✅ Thank you for completing the survey!
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அடுத்த மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம் என்றும் இவை ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை விவகாரத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மைக்ரோமேக்ஸ் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியர்களுக்காக இந்தியர்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் மைக்ரோமேக்ஸ் இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது.
'நாங்கள் கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறோம், விரைவில் மிகப்பெரிய சாதனத்தை வெளியிடுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள்' என மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile