PhonePe Launches UPI 123Pay (1)
PhonePe இந்தியாவில் அதன் பீச்சர் போன் கஸ்டமர்களுக்கு UPI பேமண்ட் சேவையை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இப்பொழுது இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் இன்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பலாம். இதன் மூலம், இந்தியாவின் 20 கோடிக்கும் அதிகமான ஃபீச்சர் ஃபோன் (feature phone) பயனர்களுக்கு UPI பணப் ட்ரேஸ்செக்ஷன் வசதியை விரிவுபடுத்தும் முதல் முக்கிய மூன்றாம் தரப்புச் ஆப சேவை வழங்குநராக (TPAP) PhonePe திகழ்கிறது. இதன் மூலம் நெட்வர்க் கவரேஜ் மூலம் ட்ரேஸ்செக்ஷன் தடை படாது மேலும் இந்த செவயடனது எந்த எந்த போன்களில் கிடைக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க.
இந்த சேவையானது HMD மாடல்களுக்கு கிடைக்கும் அதில் HMD 105 2G, HMD 110 2G, Nokia 105 Classic, Nokia 105 Single SIM, Nokia 105 Dual SIM, Nokia 106 மற்றும் Nokia 123 Shield ஆகியவை அடங்கும் இதை தவிர Lava மற்றும் Itel ஆகிய போனிலும் UPI சேவை பெற முடியும். இதை தவிர மற்ற நிறுவனங்களும் இதில் விரைவில் மற்ற நிறுவனங்களின் போன்களும் சேர்க்க படும்.
PhonePe UPI 123Pay சேவை என்பது SMS மூலம் பணம் அனுப்பலாம் அதாவது இது 2G கனெக்டிவிட்டி போன்ற கவரேஜில் சிரக வேலை செய்யும். இந்த அம்சமானது peer-to-peer (P2P) பிளாட்பாரம் மூலம் மொபைல் நம்பர் அல்லது UPI IDs மூலம் மூலம் பணம் அனுப்பலாம். இதை தவிர peer-to-merchant (P2M) அதாவது இந்த அம்சமானது UPI IDs மற்றும் QR ஸ்கேனிங் மூலம் பணம் அனுப்புவது ஆகும். மேலும் இதன் மூலம் மக்கள் தங்களின் அக்கவுண்டில் இருக்கும் பேலன்ஸ் செக் செய்வது மற்றும் ட்ரேன்ஸ்செக்ஷன் ஹிஸ்டரி சரிபார்க்கலாம் மேலும் வரும் காலத்தில் கூடுதல் அம்சம் சேர்க்கப்படும் என PhonePe கூறியுள்ளது.
இதையும் படிங்க:பட்ஜெட் ப்ரெண்ட்லி LAVA போனில் அதிரடியாக ரூ,8,700 குறைப்பு இன்று விற்பனைக்கு வருகிறது
PhonePe தலைமை நிர்வாக அதிகாரி சமீர் நிகம் கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் பணம் பரிவர்த்தனை செய்யப்படும் முறையை UPI முற்றிலுமாக மாற்றியுள்ளது. இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் PhonePe பெருமை கொள்கிறது. இப்போது, இந்த அம்சத்தை ஒரு பெரிய அளவில் கொண்டு செல்வதே எங்களின் அடுத்த இலக்காகும். PhonePe UPI 123Pay மூலம் ஃபீச்சர் போன்களுக்கு UPI-ஐக் கொண்டு வருவது இந்த திசையில் ஒரு முக்கிய படியாகும். இதன் மூலம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் பலன்கள் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றடைவது உறுதி செய்யப்படும்.”