India-Pakistan கடும் மோதலின் காரணமாக X யில் 8000 அக்கவுண்டை தடை செய்ய அரசு அதிரடி

India-Pakistan நடுவில் நடக்கும் மோதலின் காரணமாக இந்திய அரசு மிக பெரிய அதிரடி நடவடிக்க எடுத்துள்ளது, இந்தியாவில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அக்கவுண்ட்களை ப்ளாக் செய்ய எலோன் மஸ்க்கின் சமூக ஊடக தளமான X-க்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது, அதன் பிறகு X இப்போது இந்தக் அக்கவுண்ட்களை ப்ளாக் செய்ய தொடங்கியுள்ளது. முழு விஷயம் என்ன, அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் என்ன காரணம் இருக்க முடியும் என்பதை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
பஹல்காம் தாக்குதலுக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்தது, அதைத் தொடர்ந்து பாகிஸ்தானும் பதிலடி கொடுத்தது. இதற்கிடையில், இந்திய அரசாங்கம் வியாழக்கிழமை சமூக ஊடக தளமான X-க்கு நாட்டில் 8,000 அக்கவுண்ட்களை தடை செய்ய உத்தரவிட்டது, அதன் பிறகு இந்த அக்கவுண்ட்கள் X-ஆல் மூடப்பட்டுள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைக்கு வந்த இந்தியாவின் புதிய ஐடி சட்டங்களின் கீழ் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவுகளைப் பின்பற்றாவிட்டால், எக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய அபராதங்களையும், அதன் உள்ளூர் ஊழியர்களுக்கு சிறைத்தண்டனையையும் எதிர்கொள்ளும்.
அரசாங்கம் ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பித்த பிறகு, சமூக ஊடக தளமான X ஆல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அக்கவுன்ட் மூடிய பிறகு, இது தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து உத்தரவுகளைப் பெற்றதாக X ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 8,000 அக்கவுண்ட்களை ப்ளாக் செய்வதற்கான நிர்வாக உத்தரவை அரசாங்கம் பிறப்பித்துள்ளதாகவும் எக்ஸ் கூறினார். அவ்வாறு செய்யத் தவறினால், நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படலாம்.
ஜம்மு விமான நிலையத்தை குறிவைக்க பாகிஸ்தான் முயற்சித்ததைத் தொடர்ந்து, 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகளை தடை செய்யும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கணக்குகள் முடக்கப்பட்டதாக X இன் உலகளாவிய அரசாங்க விவகாரக் குழு தெரிவித்துள்ளது. இந்த அக்கவுண்ட்களை X தடுக்கவில்லை என்றால், அந்த நிறுவனம் கடுமையான அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும், அதன் உள்ளூர் ஊழியர்களும் சிறைத்தண்டனையை சந்திக்க நேரிடும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
சோசியல் தளங்களில் தவறான செய்திகளைப் பரப்புவதன் மூலம் மக்களிடையே கோபத்தை உருவாக்குவதை நிறுத்த அரசாங்கத்தின் முயற்சி இது. தடுக்கப்பட்ட இந்த கணக்குகளில் சர்வதேச செய்தி நிறுவனங்கள் மற்றும் பல முக்கிய நபர்களின் கணக்குகளும் அடங்கும். பல சந்தர்ப்பங்களில் இந்தக் கணக்குகளிலிருந்து எந்தப் பதிவுகள் இந்தியச் சட்டங்களை மீறுகின்றன என்பதை அரசாங்கம் வெளியிடவில்லை என்று எக்ஸ் கூறினார். தடுக்கப்பட்ட கணக்குகளுக்கான காரணங்கள் எதுவும் பகிரப்படவில்லை.
விளம்பரம்
இந்த விஷயத்தில் அரசாங்கத்துடன் தான் சிறிதும் உடன்படவில்லை என்றும் எக்ஸ் கூறுகிறார். இந்தியாவில் தங்கள் தளத்தை பராமரிப்பதற்காக மட்டுமே அவர்கள் உத்தரவுகளுக்கு இணங்க முடிவு செய்தனர். இந்தியாவில் உள்ள மக்கள் தகவல்களை அணுகுவதைப் பராமரிப்பது முக்கியம் என்று நிறுவனம் கூறியது.
இதையும் படிங்க மே 7 உங்க போனுக்கு வந்தாத அந்த எச்சரிக்கை, வரவில்லை என்றால் உடனே செய்யுங்க இந்த செட்டிங்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile