eSIM பயன்படுத்துகிறிர்களா உங்க பேங்க் அக்கவுண்டை ஹேக் செய்ய வாய்ப்பு உள்ளது இதிலிருந்து தப்போபது எப்படி?
தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை எளிதாக்குகிறது, ஆனால் ஹேக்கர்கள் மக்களை சிக்க வைக்க அதைப் பயன்படுத்துகின்றனர்.
சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ‘F.A.C.C.T'' இ-சிம் பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது
டிஜிட்டல் செக்யூரிட்டி தவிர்ப்பதற்கும் தங்கள் தாக்குதல்களின் முறையை மாற்றியுள்ளனர்.
தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை எளிதாக்குகிறது, ஆனால் ஹேக்கர்கள் மக்களை சிக்க வைக்க அதைப் பயன்படுத்துகின்றனர். ரஷ்யாவின் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ‘F.A.C.C.T” இ-சிம் பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. உண்மையில், eSIM ஸ்வாப்பர்கள் மக்களின் போன் நம்பர்களை திருடுவதற்கும் டிஜிட்டல் செக்யூரிட்டி தவிர்ப்பதற்கும் தங்கள் தாக்குதல்களின் முறையை மாற்றியுள்ளனர். கடந்த ஆண்டு ஒரு வழக்கில், மக்களின் தனிப்பட்ட அக்கவுண்ட்கள் அணுகுவதற்கு கிட்டத்தட்ட நூறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக நிறுவனம் அறிந்திருக்கிறது.
SurveyeSIM ஹேக்கிங் எப்படி நடக்கிறது
செய்திகளுக்குச் செல்வதற்கு முன், eSIM பற்றி அறிந்து கொள்வது அவசியம். eSIMகள் டிஜிட்டல் சிம்களைப் போன்றது, அவை மக்களின் போன்களில் சேமிக்கப்படுகின்றன. இது ஒரு பிசிக்கல் சிம் போல வேலை செய்கிறது. சேவை வழங்குநரால் வழங்கப்பட்ட QR கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் eSIM ஐ திவாஸ் சேர்க்கலாம்.

இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது, மேலும் அவர்கள் மொபைல் போன்களில் இருந்து சிம் கார்டு ஸ்லாட்டுகளை அகற்றி வருகின்றனர்.
சிம் மாற்றுபவர்கள் eSIM தொழில்நுட்பத்தை உடைக்கத் தொடங்கியுள்ளனர் என்றும் மக்களின் தொலைபேசி எண்கள், வங்கி விவரங்கள் போன்றவற்றை அணுக முடியும் என்றும் அறிக்கை கூறுகிறது.
தாக்குபவர்கள் திருடப்பட்ட அல்லது லீகான க்ரிடேன்சியல் பயன்படுத்தி பயனர்களின் மொபைல் அக்கவுன்ட் அபகரித்து, பின்னர் QR கோட்களை உருவாக்குவதன் மூலம் மொபைல் நம்பர்களை அவர்களின் போன்களுக்கு மாற்றுகிறார்கள். இந்தச் செயல்பாட்டின் போது, பாதிக்கப்பட்டவரின் மொபைல் நம்பர் கடத்தப்பட்டு, இ-சிம் செயலிழக்கச் செய்யப்படுகிறது.

பிறகு என்ன ஆகும்?
அவர்கள் மொபைல் ஃபோன் நம்பர்களுக்க்ன அக்சஸ் பெற்றவுடன், குற்றவாளிகள் பயனர்களின் பேங்க்கள் மற்றும் மெசேஜ் ஆப்கள் உட்பட பல சேவைகளை அணுக முடியும், மேலும் இரண்டு பெக்டர் அங்கீகாரத்தையும் கூட கடந்து செல்ல முடியும். இதன் மூலம் பயனர்களின் அக்கவுன்ட்களிருந்து பணத்தை மாற்ற முடியும்.
இதிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி ?
eSIM ஸ்வாப்பிங் தாக்குதல்களைத் தவிர்க்க, பயனர்கள் தனிப்பட்ட கடவுச்சொற்களைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் போல் இ-பேங்கிங் சேவையைப் பயன்படுத்தினால், அந்தக் கணக்கின் பாதுகாப்பு இறுக்கமாக இருக்க வேண்டும். உங்கள் விவரங்களைக் கூட யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது, நீங்கள் ஆபத்தில் இருப்பதாக உணர்ந்தால், உடனடியாக கடவுச்சொல்லை மாற்ற வேண்டும்.
இதையும் படிங்க:WhatsApp யின் ப்ரோபைல் பிக்ஜர் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கவே முடியாது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
