Paytm Warning: நீங்கள் Paytm கணக்கு வைத்திருப்பவரா? பெரும்பாலும் வங்கி கணக்கு மூலம் ஆன்லைனில் பரிவர்த்தனை செய்கிறீர்களா? அப்படியெனில் வங்கிக் கொள்ளையர்களிடமிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இது பற்றிய சமீபத்திய அறிவிப்பில், ஆன்லைன் வங்கி மோசடிகள் குறித்து தங்களிடம் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், மோசடி செய்பவர்களிடமிருந்து எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்குமாறு ‘பேடிஎம்’ கேட்டுக் கொண்டுள்ளது.
A. Your Paytm KYC has expired உங்கள் ( Paytm KYC காலாவதியானது)
B. Or it needs to be renewed ( அல்லது அதை புதுப்பிக்க வேண்டும்)
C. Or your account will be blocked in 24 hours ( அல்லது உங்கள் கணக்கு 24 மணி நேரத்தில் ப்லோக் செய்யப்படும்.).
மோசடி செய்பவர்கள் சில மக்களை குறி வைத்து அவர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் SMS அனுப்புகிறார்கள் அதாவது அதில் உங்களின் Paytm அக்கவுண்ட் ப்லோக் செய்யப்பட்டதாகவும் அல்லது KYC போன்றவை காலாவதியாகிவிடும் என்று அதில் கூறப்படுகிறது. மேலும் அதில் ஒரு குறிப்பிட்ட எண்ணை அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள். உண்மையான மோசமான வாடிக்கையாளர்களை மோசடி செய்ய அவர்கள் இரண்டு தந்திரங்களை போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. உங்களது மொபைல் வேலட்டை உங்களது வங்கிக் கணக்குடன் இணைத்திருந்தால், இது நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும்.
பேடிஎம்’ வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில், AnyDesk அல்லது Quicks Port உள்ளிட்ட ஆப்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாமென கேட்டுக் கொண்டுள்ளது. மொபைல் வேலட்டை வங்கி கணக்குடன் இணைத்திருந்தால், குறிப்பாக KYC விபரங்களை நிரப்பும்போது மேற்கூறிய செயலிகளை பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டாமென பேடிஎம் கூறியுள்ளது
டீம் குவெர், எனிடெஸ்க் மற்றும் குயிக்ஸ் போர்ட் போன்ற ரிமோட் ஆப்களை பயன்படுத்தி, மொபைல் வேலட்டை வங்கிக் கணக்குடன் இணைத்திருப்பவர்களிடமிருந்து மோசடிக்காரர்கள் பணம் திருடியதாக பல செய்திகள் தெரிவிக்கின்றன. தவிர, ரிசர்வ் வங்கி, எச்.டி.எஃப்.சி, எஸ்பிஐ உள்ளிட்ட பல வங்கிகளும் ஆன்லைன் வங்கி மோசடிகள் குறித்து பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கையை ஏற்கனவே வெளியிட்டிருந்தன,
மோசடி செய்பவர்கள் Paytm பயன்பாட்டிற்கு பதிலாக உங்கள் போனில் ப்ரவுஸரில் Paytm.com ஐ திறந்து கேட்கும்படி கேட்டுக்கொள்வார்கள், இதனால் அவர்கள் உங்கள் பாஸ்வர்டை தெளிவான உரையில் பார்க்க முடியும். உங்கள் பாஸ்வர்டை அவர்கள் பெற்றவுடன், மோசடி செய்பவர்கள் தங்கள் சாதனங்களிலிருந்து கணக்கை அணுகுவர் (OTP க்கு அவர்கள் அதை சாதனத் ஸ்க்ரீனில் இருந்து படிக்க முடியும் என்பதால் அதை வெளிப்படையாகக் கேட்கத் தேவையில்லை) மற்றும் மோசடி பரிவர்த்தனைகளைத் தொடங்குவார்கள்.
இது போன்ற மெசேஜ் அல்லது கால் வரும்பொழுது தவிர்ப்பது நல்லது மற்றும் அவர்கள் டவுன்லோடு செய்வதை ஏதும் செய்ய வேண்டாம் என் என்றால் அவர்கள் அனுப்பும் SMS மூலம் லிங்க் அனுப்பி அதை டவுன்லோடு செய்வதன் மூலம் உங்களின் வங்கி தகவல் அனைத்தயும் கண்காணிக்க முடியும், இரண்டாவதாக அவர்கள் உங்கள் OTP மற்றும் பாஸ்வர்ட் பெறமுடியும் அதன் மூலம் உங்கள் பணத்தை மொத்தமாக அபேஸ் செய்ய பெரும் ஆபத்து உங்களுக்கு வந்து சேரும்.எனவே மக்கள் எப்போழுதும் இத்தகைய மோசடியில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும்
● www.paytmuser.com
● www.kycpaytm.in
● jn29832.ngrok.io/index.php etc
மேலும் இவர்கள் இது போன்ற வெப்சைட்டை தானாகவே உருவாக்கிறர்ர்கள்.