மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு நஷ்டத்தின் தத்தளித்து வரும் வோடபோன் ஏர்டெல்.

Updated on 18-Nov-2019

ஒரு காலத்தில் லாபத்தை அள்ளி கொட்டிய செல்போன் தகவல் தொடர்பு நிறுவனங்கள் இன்று பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சேவைகள் 2016-ம் ஆண்டு அறிமுகமானது. அந்த நிறுவனம் வழங்கிய அதிரடி சலுகைகள் மற்றும் வசதிகளால் வாடிக்கையாளர்கள் அந்த பக்கம் தாவினார்கள்.

எனவே அதை சமாளிக்க முடியாமல் மற்ற தனியார் செல்போன் நிறுவனங்கள் தத்தளித்தன. இதனால் அதன் வருமானம் பெருமளவு குறைந்தது. பல நிறுவனங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டன. இதன் காரணமாக தற்போது வோடாபோன், ஏர்டெல், ஜியோ ஆகிய 3 தனியார் நிறுவனங்கள் மட்டுமே செல்போன் சேவையாற்றி வருகின்றன.

செல்போன் நிறுவனங்கள் 2 வகையான கட்டணங்களை மத்திய டெலிபோன் துறைக்கு வழங்க வேண்டும். அதாவது லைசென்சு கட்டணம், அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) கட்டணம் என செலுத்த வேண்டும். அந்த நிறுவனங்களின் செல்பாடு அடிப்படையில் இந்த இரு கட்டணங்களும் நிர்ணயிக்கப்படும். 

ஆனால் இவ்வாறு பணம் செலுத்த அந்த நிறுவனங்கள் முன்வரவில்லை. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 15 நிறுவனங்கள் இவ்வாறு பணத்தை செலுத்த வேண்டியிருந்தது. அந்த நிறுவனங்கள் டெலிபோன் துறை கூறிய கணக்கின் படியே பணத்தை கட்ட வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 24-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

இந்த கட்டணங்களை நிறுவனங்கள் தாங்கள் வழங்கும் செல்போன் சேவை வருவாயில் இருந்து மட்டும் கட்டிவந்தன. ஆனால் மத்திய டெலிபோன் துறை அவர்கள் விற்கும் போன்கள், பங்கு சந்தை வருமானங்கள், பழைய பொருட்களை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானங்கள் என அனைத்தையும் கணக்கிட்டு கட்டணங்களை நிர்ணயித்தது.

இதன் காரணமாக இந்த நிறுவனங்கள் சுமார் 92 ஆயிரம் கோடி கட்ட வேண்டியது இருந்தது. அதாவது லைசென்சு கட்டணம், அலைக்கற்றை கட்டணம், 16 ஆண்டுகளாக இவை நிலுவையில் இருந்ததால் அதற்கான வட்டி, வட்டிக்கான அபராதம் மற்றும் அபராத தொகை என மொத்தமாக சேர்ந்து இவ்வளவு தொகையை கட்ட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அந்த வகையில் வோடாபோன் நிறுவனம் ரூ.46,150 கோடியும், ஏர்டெல் நிறுவனம் ரூ. 28,450 கோடியும் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. ஏற்கனவே ஜியோ நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க முடியாமல் திண்டாடிய இந்த நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் இன்னும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

இதன்படி வோடாபோன் நிறுவனம் ரூ.50,921 கோடியும், ஏர்டெல் நிறுவனம் ரூ.23,405 கோடியும் நஷ்டமடைந்து இருப்பதாக கூறியுள்ளது. இதனால் இரு நிறுவனங்களையும் தொடர்ந்து நடத்த முடியாத அளவிற்கு நிலைமை சென்றுள்ளது.

இந்த பணத்தை 3 மாத காலத்தில் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியிருந்தது. எனவே நிறுவனங்கள் அந்த தொகையை கணக்கிட்டு கடந்த காலாண்டுக்கான லாப நஷ்ட விவரங்களை வெளியிட்டுள்ளது. அதாவது ஜூலையில் இருந்து செப்டம்பர் மாதம் வரை உள்ள காலாண்டில் அந்த நிறுவனங்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்திருப்பதாக கூறியுள்ளது.

அதாவது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி அவ்வளவு தொகையை எங்களால் கட்ட முடியாது. அதில் எங்களுக்கு விலக்கு தாருங்கள் என்று அவர்கள் கேட்கிறார்கள்.எனவே மத்திய அரசு இதில் தலையிட்டு பல சலுகைகளை வழங்க வேண்டும் என்று அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன. 

மத்திய அரசு இதற்கு விலக்கி அளித்தால் அந்த நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட முடியும். இல்லை என்றால் செயல்படுத்துவது கடினம் என்று கூறப்படுகிறது.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :