புதிய ஜியோ போன் வெளியீடு அடுத்த ஆண்டு நடைபெறலாம்

HIGHLIGHTS

புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு அடுத்த ஆண்டு நடைபெறலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவில் புதிய Jio ஸ்மார்ட்போன் விலை ரூ. 4 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

புதிய ஜியோ போன் வெளியீடு அடுத்த ஆண்டு நடைபெறலாம்

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து புதிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. எனினும், புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு அடுத்த ஆண்டு நடைபெறலாம் என கூறப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் சோதனை பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அறிமுகமாக சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் விலை ரூ. 4 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. 
 
இதேபோன்று ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை குவால்காம் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக குவால்காம் வென்ச்சர்ஸ் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் 0.15 சதவீத பங்குகளை வாங்க முதலீடு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2ஜி பீச்சர் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை கவர திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 கோடி வாடிக்கையாளர்களிடம் புதிய ஸ்மார்ட்போனினை விற்பனை செய்ய ஜியோ இலக்கு நிர்ணயித்து உள்ளதாக கூறப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo