Bharti Airtel தனது பயனர்களுக்கு பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ (Perplexity Pro) என்ற AI சேவையின் சந்தாவை இலவசமாக வழங்குவதாக அறிவித்து இருந்தது. இந்த சந்தாவின் மதிப்பு ரூ.17,000 ஆகும். இதனால் ஏர்டெல் கஸ்டமர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏர்டெல் மொபைல், பிராட்பேண்ட், DTH உள்ளிட்ட அனைத்து சேவைகளின் பயனர்களும் இதை க்ளெயிம் செய்யலாம். பெர்ப்ளெக்சிட்டி என்பது ஏஐ அடிப்படையிலான செர்ச் இன்ஜின் (Search Engine). இது உங்கள் கேள்விகளுக்கு உடனடி, துல்லியமான பதில்களை வழங்கும். இந்த இலவச சலுகை, ஏர்டெல் நிறுவனத்தின் 360 மில்லியன் பயனர்களுக்கும் கிடைக்கும்.airtel யின் இந்த நன்மை ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் இரண்டு கஸ்டமர்களுக்கும் கிடைக்கும் மேலும் இந்த நன்மை எதுவரை கிடைக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க.
ஏர்டெல் யின் அதன் Perplexity Pro யின் இந்த இலவச நன்மை ஜூலை 17 2025 லிருந்து ஜனவரி 17, 2026 வரை இருக்கும் அதாவது இது ஆறு மாதங்கள் வரை இந்த நன்மையை பெற முடியும் .
இந்த Perplexity Pro நன்மையை பெற விரும்பினால் நீங்கள் எளிதாக Airtel Thanks app மூலம் பெற முடியும், அதன் பிறகு லாகின் செய்வதற்க்கு Google ID அல்லது Apple ID கேட்க்கும் அதன் மூலம் இந்த இலவச நன்மை பெறலாம். இந்த இலவச ஆபர் pro சப்ஸ்க்ரிப்சன் யில் மட்டுமே கிடைக்கும் மற்றும் இது எண்டர்ப்ரைசஸ் அல்லது Max அப்க்ரேடுக்கு செல்லாது.
இதையும் படிங்க Airtel ரூ,17,000 மதிப்பிலான Perplexity Pro நன்மையை வழங்குகிறது அதை எப்படி பெறுவது இதனால் என்ன பயன்
Perplexity Pro சாதாரண சர்ச் இன்ஜின்களை விட சிறப்பானது. இது உங்கள் கேள்விகளுக்கு உடனடி பதில்களை வழங்கும், அதுவும் ஆதாரங்களுடன் வழங்கும். உதாரணமாக, பயண திட்டம், சமையல் குறிப்பு, ஆராய்ச்சி தகவல்கள் போன்றவற்றை எளிதாகப் பெறலாம்.