jiobharat v4 4g
Reliance Jio, இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும், இது இப்பொழுது அதன் கஸ்டமர்களுக்கு ரூ,800க்கும் குறைந்த விலையில் புதிய போனை அறிமுகம் செய்துள்ளது மற்றும் இந்த போனை அதன் 4G செக்மண்டின் கீழ் கொண்டு வரப்பட்டது இந்த போன் நமது ஊரில் 4G போன் பயன்படுத்தும் கஸ்டமர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்காக தயாரிக்கப்பட்டதாகும். jio அதன் புதிய போனை JioBharat சீரிஸ் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது, இந்த போனின் பெயர் JioBharat V4. ஆகும் மேலும் இந்த போனின் அம்சம் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.
JioBharat V4 போனின் விலை ரூ,799க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த போனை Blue மற்றும் Black கலரில் வாங்கலாம், மேலும் இந்த போனை அதன் அதிகாரபூர்வ வெப்சைட் JioMart, Jio.com, மற்றும் Reliance Jio அதிகாரபூர்வ ரீடைல் ஸ்டோர் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் போன்றவற்றில் வாங்கலாம்.
Jio யின் இந்த போன் முதல் Safety First Phone ஆகும், அதாவது இந்த போனில் Monitoring மற்றும் User Manager போன்ற அம்சம் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போனில் மூவி மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் அம்சமும் வழங்கப்படுகிறது மற்றும் ஸ்போர்ட்ஸ் போன்றவற்றையும் பார்க்கலாம் இந்த போன் Jio 4G நெட்வொர்க் மூலம் வருவதால் நீங்கள் JioPay போன்ற பாதுகாப்பான UPI சேவைகளும் வழங்கப்படுகிறது
UPI லட்சக்கணக்கான இந்தியர்களின் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்டது. இருப்பினும், ஆரம்பத்தில் இதன் செயல்பாடு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மட்டுமே இருந்தது. இப்போது, ஜியோபாரத் நிறுவனத்திற்கு நன்றி, ஃபீச்சர் போன் பயனர்கள் கூட தங்கள் வங்கிக் கணக்குகளிலிருந்து நேரடியாக UPI மூலம் பணம் செலுத்தலாம். மேலும், ஜியோபாரத் பல பிற போன் மாடல்களையும் வழங்குகிறது, இது பயனர்கள் தங்கள் தேவைகள் மற்றும் பட்ஜெட்டின் அடிப்படையில் சரியான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது.
ஜியோபாரத் V4-இன் மிக முக்கியமான அம்சம் அதன் சேஃப்டி ஷீல்டு (Safety Shield) ஆகும். இந்த அம்சம், உங்கள் ஜியோபாரத் V4-ஐ உங்கள் மெயின் ஸ்மார்ட்போனுடன் இணைக்க அனுமதிக்கிறது. நீங்கள் ஜியோதிங்ஸ் (JioThings) ஆப்பை இன்ஸ்டால் செய்தால் மட்டும் போதும். இணைக்கப்பட்டவுடன், உங்கள் போனில் லொகேஷன் எளிதாகக் கண்காணிக்கவும், கால்களை தொலைவிலிருந்து நிர்வகிக்கவும், மற்றும் சில முக்கியமான அமைப்புகளைக் கையாளவும் முடியும். மேலும், ஒரு காலிங் சந்தேகத்திற்கிடமானதாகவோ அல்லது தொந்தரவாகவோ தோன்றினால், அதை அந்தச் செயலி மூலம் தடுக்கலாம் அல்லது கட்டுப்படுத்தலாம்.