பல்லாயிரகணக்கான சேவைகளுக்கு ஒரே ஆப் ஆன UMANG யில் டேட்டா லீக்
அரசு சார்ந்த வேலைகளுக்கு ஒரே ஆப் யில் செயல்படும் அரசின் சொந்த தளமான UMANG ஆப் ஆகு
இந்த ஆப் யில் நூற்றுகணக்கான பொது சேவைகலை இதில் வழங்கி வருகிறது
இது UMANG வெப்சைட்டை சோதிக்கப்பட்ட பல சேவைகளைப் பாதிக்கிறது.
பல அரசு சார்ந்த வேலைகளுக்கு ஒரே ஆப் யில் செயல்படும் அரசின் சொந்த தளமான UMANG ஆப் ஆகும். இந்த ஆப் யில் நூற்றுகணக்கான பொது சேவைகலை இதில் வழங்கி வருகிறது . இத்தகைய முக்கிய தளங்களில் கோடிகணக்கானோர்களின் டேட்டா லீக் செய்யப்பட்டுள்ளது EPFO யின் சம்மதப்பட்ட தகவல் லீக் ஆகியுள்ளது மேலும் இதன் விவரங்கள் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
Surveyபல ஆண்டுகளாக இந்த குறைபாடு இருக்கிறது
The Hindu அறிக்கையின்படி பார்த்தால் இது பாதுகாப்பின்மையை தெரிவிக்கிறது, இதன் பாதிப்பு இது UMANG வெப்சைட்டை சோதிக்கப்பட்ட பல சேவைகளைப் பாதிக்கிறது. இந்த இணையதளத்தில் 2,400-க்கும் மேற்பட்ட சேவைகள் உள்ளன.
இதில் (Reaserchers) ஆராய்ச்சியாளர்களான அக்ஷய் சி.எஸ். மற்றும் வைரல் வகேலா ஆகியோர், இந்தப் பிரச்சனை இணையதளத்தின் கட்டமைப்பிலிருந்து உருவாவதாகக் கூறுகின்றனர். அதன் டிசைனில் ஏறக்குறைய எல்லாமே குறைபாடுடையதாக உள்ளது என்று திரு. வகேலா கூறினார்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற ஐந்தாவது உலகளாவிய இணையவெளி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியால் உமாங் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
என்ன என்ன தகவல் லீக்
லீக் தேட்டாக்களின் படி EPFO UAN நம்பர்கள், ஒரு கேஸ் சிலிண்டர் நிறுவனத்துடனான LPG சிலிண்டர் புக்கிங் தகவல்கள் மற்றும் பல்வேறு சேவைகளில் உள்ள தனிநபர்களின் ஆதார் நம்பர் ஆகியவை அடங்கியிருந்தன. பல சேவைகளில் ஆதார் நம்பர்கள் எந்தவிதப் பாதுகாப்பு லோக் இன்றி சேமிக்கப்பட்டிருந்தன. ஆதார் சட்டம், 2016, ஆதார் நம்பர்களை இத்தகைய முறையில் சேமிப்பதை வன்மையாகத் தடை செய்கிறது. இந்தத் டேட்டா மீறலுக்கு மத்தியிலும், UMANG ஆப்யின் முக்கிய ஆதார் அமைப்பு முழுமையாகப் பாதுகாப்பாகவே இருந்தது.
இதையும் படிங்க வாட்ஸ்அப் அடுத்து Username அம்சத்திற்கு பதிலளித்த Telegram, அரசு கூறியது என்ன
குறைபாடுகளை ஒப்புக்கொண்டார்
உண்மையில், கடந்த மூன்று மாதங்களில் 400 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளுடன், EPFO தான் UMANG-இன் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சேவையாகும். மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ‘தி இந்து’ பத்திரிகைக்கு அளித்த அறிக்கையில் இந்தக் குறைபாடுகளை ஒப்புக்கொண்டது. அமைச்சகத்தின் மேம்பாடு மற்றும் பாதுகாப்புக் குழுக்கள் இந்தப் பிரச்சினைகளைக் கவனமாக ஆராய்ந்து, தேவையான சரிசெய்தல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருவதாக அமைச்சகம் கூறியது. தொடர்புடைய API-களில் உள்ள தெளிவுரைத் தகவல்கள் முறையாக encrption செய்யப்பட்டுள்ளன.
CERT ஏற்கனவே இதை எச்சர்த்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக ஏபிஐ பரிவர்த்தனைப் பதிவுகளை ரிசர்ச் செய்ததில், பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை சீராக இருந்து வருவதாகவும், உமாங் வலைதளத்தின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
