வேலையின் சுமை தாங்கமுடியாமல் தற்கொலை செய்து கொண்ட Robot

HIGHLIGHTS

பணிசுமையில் அதிகம் பாதிக்கப்படும் பலருக்கு இது இந்த சம்பவமானது சோகமாக தெரியலாம்

நாட்டில் முதல் முறையாக ரோபோ தற்கொலை செய்து கொள்வது இதுவே முதல் முறை.

robot சூப்பர்வைசர்’ என்று அழைக்கப்படும் ரோபோ இரண்டு மீட்டர் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்தது

வேலையின் சுமை தாங்கமுடியாமல் தற்கொலை செய்து கொண்ட Robot

பணிசுமையில் அதிகம் பாதிக்கப்படும் பலருக்கு இது இந்த சம்பவமானது சோகமாக தெரியலாம் தென் கொரியாவில் குமி நகர சபையில் வேலை செய்யும் ஒரு அரசு ஊழியர் robot படிக்கட்டில் இருந்து கீழே விழுந்த பிறகு பதிலளிக்கவில்லை, நாட்டில் முதல் முறையாக ரோபோ தற்கொலை செய்து ஒல்வது இதுவே முதல் முறை.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

robot சூப்பர்வைசர்’ என்று அழைக்கப்படும் ரோபோ இரண்டு மீட்டர் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்த சம்பவம் சில வாரங்களுக்கு முன்பு நடந்தது. இந்த ரோபோ தற்போது செயலிழந்துவிட்டதாக குமி நகர சபை அறிவித்துள்ளது. கவுன்சில் கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் ரோபோ உடைந்து கிடப்பதை போட்டோவில் காணப்படுகிறது என்று டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

அது கீழே விழுந்து சரிவதற்கு முன்பு ரோபோ அதன் இடத்தில் வட்டமிட்டு கொண்டிருந்ததாக தெரிவித்தனர், ஆனால் சரியான காரணம் தெரிய இன்னும் விசாரணையில் உள்ளது. ரோபோவின் துண்டுகள் நிறுவனத்தால் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளதாக கவுன்சில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த ரோபோ தினசரி டாக்யுமென்ட் வழங்குதல், நகர விளம்பரங்கள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு தகவல்களை வழங்குதல் ஆகியவற்றில் உதவி வருகிறது. மற்றொரு அதிகாரி கருத்து தெரிவிக்கையில், “இது அதிகாரப்பூர்வமாக நகர மண்டபத்தின் ஒரு பகுதியாக இருந்தது, மேலும் இது எங்களில் ஒருவர் போல் வேலை செய்தது என்று கூறினார்

லோக்கல் மீடியா தலைப்புச் செய்திகள், ரோபோ தற்கொலை குறித்து கேள்வி எழுப்பி, “சிவில் அதிகாரி ஏன் அதைச் செய்தார்?” என்று கேட்டனர். மற்றும் “ரோபோவுக்கு மிகவும் கடினமாக இருந்ததா?” ஆன்லைன் ரியாக்ஷன்களில், “வேலைச்சுமை அதிகமாக இருந்திருந்தால், அவர் நீண்ட நேரம் சுழன்று படிக்கட்டுகளில் இறங்கியிருப்பாரா?” போன்ற போன்ற பல கருத்துகள் எழுப்பப்பட்டது மற்றும் “ஸ்கிராப் மெட்டல் அமைதியுடன் இருக்க நான் பிரார்த்தனை செய்கிறேன்.” என கூறப்பட்டது

ஆகஸ்ட் 2023 யில் அப்போயன்ட் செய்யப்பட்ட இந்த ரோபோ குமியில் இந்த முறையில் முதலில் பயன்படுத்தப்பட்டது. பியர் ரோபோட்டிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டது. ஒரு கலிஃபோர்னிய ரோபோ-வெயிட்டர் ஸ்டார்ட்அப், ரோபோ காலை 9 மணி முதல் வேலை செய்தது. மாலை 6 மணி வரை அதன் சொந்த சிவில் சர்வீஸ் ஆபிசர் கார்ட் கூட இருந்தது. மற்ற ரோபோக்களைப் போலல்லாமல், இது ஒரு லிஃப்ட் கால் மற்றும் மாடிகளுக்கு இடையில் தானாகவே நகரும்

தென் கொரியா ரோபோ பயன்பாடு உலகளாவிய முன்னணியில் உள்ளது, ஒவ்வொரு 10 ஊழியர்களுக்கும் ஒரு இண்டஸ்ட்ரியில் ரோபோவுடன் உலகளவில் அதிக ரோபோ டென்சிட்டி கொண்டுள்ளது. ரோபாட்டிக்ஸ் சர்வதேச கூட்டமைப்பு படி. இருந்த போதிலும், தற்போது இரண்டாவது ரோபோ அதிகாரியை தத்தெடுக்கத் திட்டமிடவில்லை என்று குமி நகர கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க இந்த இடத்தில் Electricity bill, UPI யில் செலுத்த முடியாது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo