Auto-Reset’ fraud
டிஜிட்டல் இந்தியாயாவக மாறி வரும் உலகில் மக்கள் பெரும்பாலும் பேங்கிங் சேவை மற்றும் UPI போன்றவற்றை அனித்தும் ஒத்த ஸ்மார்ட்போனில் செய்கிறார்கள், எவ்வளவு இந்தியாவில் டிஜிட்டல் அதிக வளர்ச்சியை அடைகிறதோ அதே அளவுக்கு அதே அளவுக்கு நூதன முறையில் மோசடியும் அட்வான்ஸாக மாறி வருகிறது. இப்பொழுது மும்பையில் ஒரு மிகவும் அச்சுறுத்தும் வகையில் சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது மற்றும் புதிய சைபர் ஸ்கேம் ஒன்று வெளுச்சதுக்கு வந்துள்ளது, இது Auto-Reset Cyber Fraud என்ற பெயரில் புதுவித நூதன திருட்டு சம்பம் நடந்து வருகிறது.இந்த மோசடியின் கீழ், மோசடிக்காரர்கள் தொலைவில் இருந்தபடியே உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள எல்லா டேட்டக்களையும் அழித்துவிடுகிறார்கள், மேலும் நீங்கள் உணர்வதற்குள் உங்கள் பேங்க் அக்கவுன்ட் முழுவதுமாகக் காலியாகிவிடுகிறது.
சமிபத்தில் ஒரு CISF அதிகாரி ஒருவர் இந்த நூதன முறையிலான ஸ்கேமில் சிக்கியுள்ளார் அதாவது அவர் போன் ரீசெட் ஆகியது அதன் பிறகு அணைத்து ஆப்களும் போனில் இருந்து மறைய தொடங்கின அதன் பிறகு தனது அக்கவுண்டில் இருந்து ரூ,95,000 பறிபோனதாக கூறியுள்ளார் இதன் முழு விவரங்கள் பார்க்கலாம் வாங்க.
இந்த சம்பவமானது சாதரணமாக நடந்து விடுவதில்லை அதாவது இந்த ஸ்கேம் சந்தேகதிர்கூரிய லிங்கில் க்ளிக் செய்வதன் மூலம் இது நடைபெறுகிறது அதாவது whatsApp அல்லது மெசேஜ் மற்றும் இமெயில் பாக்ஸில் வரும் Malcious லிங்க் நமக்கு தெரியாமலே க்ளிக் செய்வதன் மூலம் உங்களுக்கே தெரியாமல் மேல்வேர் ஆப்பை இன்ஸ்டால் செய்து விடுகிறது, அதன் பிறகு உங்கள் போனின் மொத்த கண்ட்ரோலும் அவருக்கு சென்று விடும் இதன் மூலம் உங்கள் போனில் வரும் மெசேஜ் OTP பேங்க் லோகின் UPI போன்ற அணைத்த தகவலையும் அவர்கள் கண்காணிக்கலாம் இதன் மூலம் உங்களின் பேங்க் பாஸ்வர்ட் திருடி மொத பணத்தையும் அபேஸ் செய்து விடுகிறார்கள் அதாவது உங்களின் மொத தகவலை திருடிய பிறகு உங்கள் போனில் திருட்டு சம்பவம் நடந்ததே தெரியாமல் இருக்க ரீசெட் செய்கிறார்கள் அதன் பின் தான் நமக்கு பல ஆப் மற்றும் தகவல் திருடியதே தெரியவருகிறது.
இந்த மோசடி மிகவும் ஆபத்தானது என கூறப்படுகிறது, ஏன் என்றால் நமது அக்கவுண்டில் இருந்து பணம் பறிக்கப்பட்டது நமக்கே தெரியாது அதாவது இதை நாம் நீண்ட நேரத்திருக்கு பிறகே நமக்கே தெரிய வரும், அதாவது உங்கள் ஸ்மார்ட்போன் எப்போதும் உங்கள் பாக்கெட்டிலோ அல்லது கையிலோ இருக்கும், மேலும் ஸ்க்ரீனில் எல்லாம் சாதாரணமாகத் தோன்றும். ஆனால் பேக்ரவுண்டில் , வேறு யாரோ ஒருவர் உங்களின் மிகவும் ரகசியமான மற்றும் தனிப்பட்ட தகவல்களை அமைதியாகத் திருடிக்கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கே தெரியாது இதில் உங்களின் பல தகவல் திருடப்படுகிறது அதில்
இந்த Auto-Reset Cyber Fraud யிலிருந்து தப்பிக்க ஒரு சில வழிகளை பின்பற்றுவது அவசியம் அதில்
உங்கள் ஆப் அனுமதிகளை குரோஸ் செக் செய்ய, உங்கள் ஸ்மார்ட்போனின் செட்டின்க்களை அவ்வப்போது சரிபார்க்கவும். ஒரு பொதுவான ஆப்க்கு செலும்போது உங்கள் SMS, காண்டேக்ட்கள், டிவைஸ் அட்மின் அல்லது அக்சஸ் அனுமதிகள் இருந்தால், அதை உடனடியாக முடக்கவும் அல்லது மூடவும். மேலும், உங்கள் போனின் ஒப்பரேட்டிங் சிஸ்டம் முறைமை மற்றும் செக்யூரிட்டி அப்டேகள் அப்டேட் நிலையில் வைத்திருக்கவும். நீங்கள் நேரில் இல்லாமல் எந்தப் ட்ரேன்ஸ்செக்ஷனும் செய்யப்படாது, உங்கள் அனைத்து பேங்க் மற்றும் UPI செயலிகளிலும் பயோமெட்ரிக் லோக் , பிங்கர்ப்ரின்ட் அல்லது டூ பெக்ட்டார் அங்கீகாரம் (2FA) இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.
இதையும் படிங்க:WhatsApp யில் வருகிறது புதிய Scam Alert அம்சம், இனி ஆன்லைன் பிராட் பற்றி கவலை இருக்காது
இன்றைய டிஜிட்டல் உலகில், மோசடி செய்பவர்கள் ஒவ்வொரு நாளும் புதிய தந்திரங்களைக் கையாள்கின்றனர். வைரஸ் தடுப்பு மென்பொருள் அல்லது தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பியிருப்பது புத்திசாலித்தனம் அல்ல. இந்தப் புதிய சகாப்தத்தின் ஆபத்துகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே உறுதியான வழி, தனிப்பட்ட விழிப்புணர்வுதான். எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்வதற்கு, புதிய செயலியை நிறுவுவதற்கு, அல்லது உங்கள் தொலைபேசியை யாருக்கும் அணுக அனுமதிப்பதற்கு முன்பு இருமுறை யோசியுங்கள். சிறிதளவு எச்சரிக்கையும் புரிதலும் உங்களை ஒரு பெரிய நிதி நெருக்கடியிலிருந்தோ அல்லது திவால் நிலையிலிருந்தோ கூட காப்பாற்ற முடியும்.