ஆப்பிளின் ஆப் ஸ்டோரிலிருந்து ட்விட்டரை அகற்றப்பபட்டது, காரணம் என்ன?
உலகின் நம்பர்ஒன் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் மாத இறுதியில் சாமானியர் முதல் பெரிய பணக்காரர்கள்
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதையடுத்து எலன் மஸ்க் பல அதிரடி மாற்றங்களை செய்துவருகிறார்.
உலகின் நம்பர்ஒன் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் மாத இறுதியில் சாமானியர் முதல் பெரிய பணக்காரர்கள் வரை பயன்படுத்தி வரும் சமூகவலைத்தளமான ட்விட்டரை பல லட்சம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதையடுத்து எலன் மஸ்க் பல அதிரடி மாற்றங்களை செய்துவருகிறார்.
ஊழியர்கள் பணி நீக்கம், ப்ளூ டிக் வசதிக்கு மாத சந்தா என பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டார் எலன் மாஸ்க். அதுமட்டுமல்லாமல் பங்குகள் வீழ்ச்சி, விளம்பரதாரர்களின் புறக்கணிப்பு என அடுத்தடுத்து சிக்கல்களிலும் சிக்கியுள்ளது ட்விட்டர்.
அமெரிக்காவில் கருத்து சுதந்திரத்தை ஆப்பிள் வெறுக்கிறதா எனக் கேள்வி எழுப்பி ட்விட் செய்தார். மேலும் மஸ்க் தனத அடுத்தடுத்த ட்விட்களை ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கை டேக் செய்து பதிவிட்டார்.
இந்நிலையில் தான் அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்துடன் தற்போது மோதலில் ஈடுபட்டுள்ளார் எலன் மஸ்க். ஆப்பிள் நிறுவனம் ட்விட்டர் விளம்பரங்களில் செலவு செய்வதை நிறுத்திவிட்டதாகவும், விரைவில் ட்விட்டரை அதன் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்க உள்ளதாகவும் மஸ்க் கூறியுள்ளார்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile