WhatsApp இந்திய பயனர்களின் அக்கவுன்ட் திடீர் முடக்கம், முன் எச்சரிக்கை கொடுக்கவில்லை என புலம்பும் மக்கள்

Meta-க்கு சொந்த இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான WhatsApp இந்தியாவில் பல பயனர்களின் அக்கவுண்டை ப்ளாக் செய்துள்ளது. அதாவது நிறுவனம் எந்த வித முன் எச்சரிக்கை கொடுக்காமல் நிறுவனம் (restrict)தடுக்கப்பட்டதாக மக்கள் புகார் அளித்து வருகிறார்கள். பல பயனர்கள் இது குறித்து சோசியல் மீடியா தளங்களில் பதிவிட்டுள்ளனர். தங்கள் அக்கவுட்கள் கள் தற்போது ஆய்வில் இருப்பதை உணர்த்தும் வகையிலான ஸ்க்ரீன்ஷாட்ஸ் (screenshots) அவர்கள் பகிர்ந்துள்ளனர். பயனர்களின் வாட்ஸ்அப் அக்கவுன்ட் களுக்கான அக்சஸ் 24 மணிநேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ரிவ்யூ காரணமாக பயனர்கள் அக்கவுன்ட் இப்படி தெரிப்வது என்

ஆப் திறந்து பார்க்கும்போது ஒரு மெசேஜ் தோன்றுகிறது, அதில், “அக்கவுன்ட் ரிவ்யிவில் உள்ளது. கோரிக்கை தேதி: ஆகஸ்ட் 3, 2026. உங்கள் அக்கவுன்ட் செயல்பாடு மற்றும் போன தகவல் எங்கள் Terms of Service இணங்குகிறதா என்பதை நாங்கள் சரிபார்க்கிறோம். வழக்கமாக 24 மணி நேரத்திற்குள் நாங்கள் உங்களுக்கு முடிவை வழங்குவோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்குக் கீழே, வாட்ஸ்அப் ‘”Learn about account issues’ பற்றி அறிந்து கொள்ளுங்கள் என்ற ஒரு விருப்பத்தையும் வழங்கியுள்ளது. இங்கே, ‘வாட்ஸ்அப்பைப் பொறுப்புடன் பயன்படுத்துவது எப்படி’ மற்றும் ‘திருடப்பட்ட போன அல்லது அக்கவுன்ட் பற்றிய தகவல்’ போன்ற வழிகாட்டிகளை நீங்கள் பார்க்கலாம்

உங்களின் அக்கவுன்டும் இது போன்ற பிரச்சனையால் சந்தித்துள்ளதா?

வாட்ஸ்அப்பில் உள்ள எந்தவொரு அக்கவுண்டிலிருந்தும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடு மேற்கொள்ளப்பட்டால், அந்தக் அக்கவுண்டின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மெட்டா இன்ஸ்டன்ட் மெசேஜ் ஷேரிங் ஆப்யின் பாலிசிகளை மீறினால், அந்நிறுவனம் பயனரின் அக்கவுன்ட் ப்ளாக் செய்யப்படும் . உதாரணமாக, ஸ்பேம் செய்திகள் அல்லது பொய் வதந்திகளைப் பரப்பும் அக்கவுன்ட்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், பல பயனர்கள் ஒரே நேரத்தில் ஒரு அக்கவுண்டை பற்றிப் புகார் அளித்தால், அந்நிறுவனம் அக்சஸ் முடக்கிவிடும். கணக்கை ஆய்வு செய்து, அது கொள்கைகளை மீறவில்லை என்பதை உறுதிசெய்த பிறகு, அக்சஸ் மீண்டும் வழங்கப்படும்.

இதையும் படிங்க:நீண்ட நாளாக காத்திருந்த WhatsApp web calling வந்தாச்சு, இதில் சேர்க்கப்பட்ட 5 அம்சம் மற்றும் இதை எப்படி செய்வது?

வாட்ஸ்அப் தொடர்பான மற்ற மெசேஜ்களில், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட யூசர்நேம் அம்சம் இந்திய அரசால் முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெட்டா நிறுவனத்திற்கு அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. சமீபத்தில், வாட்ஸ்அப்பின் யூசர்நேம் அம்சம் குறித்து மெட்டாவிடம் அரசு விளக்கம் கோரியது, அதற்குப் பின்னர் வாட்ஸ்அப் தனது பதிலைச் சமர்ப்பித்தது.

நிறுவனம் இதுவரை காரணம் தெரிவிக்கவில்லை

எத்தனைஅக்கவுன்ட்குகள் பாதிக்கப்பட்டன என்பதை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இது ஒரு தொழில்நுட்பக் கோளாறாலா, கணக்குகளைத் தானாகவே சரிபார்க்கும் ஒரு அமைப்பாலா, அல்லது ஸ்பேம் தடுப்பு நடவடிக்கையாலா என்பதையும் அது தெளிவுபடுத்தவில்லை. மேலும், இந்தப் பிரச்சினை ஒரு சில நாடுகளில் உள்ள பயனர்களை மட்டும் பாதித்ததா அல்லது உலகெங்கிலும் உள்ள மக்களைப் பாதித்ததா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :