Uber
Uber, ixigo உடன் இணைந்து தனது ஆப்யில் ரயில் டிக்கெட் புக்கிங் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் ஒரே தளத்தில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும் , PNR நிலையைச் சரிபார்க்கவும், தங்களின் முதல் மற்றும் கடைசி மைல் பயணங்களை ஊபருடன் இணைக்கவும் முடிகிறது.இந்த அறிமுகம் , ixigo-வின் ரயில் டிக்கெட் புக்கிங் தொழில்நுட்பம் மற்றும் புக்கிங்க்கு பிற சேவைகளை UBER மொபிலிட்டி நெட்வொர்க்குடன் இணைப்பதன் மூலம், இந்தியாவில் உபெரின் நகரங்களுக்கு . இடையேயான பயணச் சேவைகளை விரிவுபடுத்துகிறது. பயனர்கள் தங்கள் பயணத்தின் முக்கியப் பகுதிகளை ஒரே தளத்தின் மூலம் அட்மின் செய்ய அனுமதிப்பதன் மூலம், ரயில் பயணத்தை எளிமையாக்குவதே இந்த நிறுவனங்களின் நோக்கமாகும்.
Uber மற்றும் ixigo இடையேயான இந்தக் கூட்டு முயற்சியானது, இக்ஸிகோவின் மேம்பட்ட பயணச்சீட்டு தொழில்நுட்பத்தை ஊபர் செயலியில் ஒருங்கிணைக்கிறது. பயனர்கள் இப்போது செயலியில் உள்ள ‘பேருந்து மற்றும் ரயில்’ அல்லது ‘சேவைகள்’ பகுதிக்குச் செல்வதன் மூலம், தங்கள் ரயிலை எளிதாகத் தேடலாம், இருக்கைகளைத் தேர்ந்தெடுக்கலாம் மற்றும் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம். மேலும், தங்களின் PNR நிலையைச் சரிபார்ப்பதற்கும், நேரலை ரயில் கண்காணிப்பிற்கும் வேறு எந்தச் செயலியின் தேவையும் இருக்காது.
ரயில் பயணத்தின் போது பயணிகளுக்கு ஏற்படும் மிகப்பெரிய சவால், சரியான நேரத்தில் நிலையத்தை அடைவதும், சேருமிடத்தில் இறங்கிய பிறகு வீட்டிற்குத் திரும்ப ஒரு வாகனத்தைக் கண்டுபிடிப்பதும்தான். ஊபரின் இந்த புதிய முயற்சியின் மூலம், பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே தங்களது வாடகைக் கார் அல்லது ஆட்டோ பயணத்தையும் திட்டமிட முடியும். நிறுவனத்தின் கூற்றுப்படி, அகமதாபாத், செகந்திராபாத் மற்றும் ஹவுரா போன்ற நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் பிரத்யேக ‘ஊபர் பிக்-அப் மற்றும் டிராப்-ஆஃப் மண்டலங்கள்’ ஏற்கனவே உள்ளன. இதனால், பயணிகள் ரயில் நிலைய வளாகத்தில் தங்களது வாகனத்தைக் கண்டுபிடிக்க சிரமப்பட வேண்டியதில்லை.
2025-26 நிதியாண்டின் தரவுகளின்படி, இந்திய ரயில்வே சுமார் 741 கோடி பயணிகளுக்கு சேவை வழங்கியுள்ளது, இது நாட்டில் உள்ள பரந்த ரயில் பயண வலையமைப்பைப் பிரதிபலிக்கிறது. ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான அதிகரித்து வரும் தேவையைப் பயன்படுத்தி, ஊபர் தன்னை ஒரு சூப்பர் மொபிலிட்டி செயலியாக நிலைநிறுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் வாகனத் தொகுப்பில் ஏற்கனவே மோட்டோக்கள், ஆட்டோக்கள், கார்கள், மெட்ரோ டிக்கெட்டுகள், நகரங்களுக்கு இடையேயான பேருந்துகள் மற்றும் வாடகைக் கார்கள் உள்ளன. தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவும் சேர்க்கப்பட்டுள்ளதால், இது நாட்டில் ஒரு முழுமையான நகரங்களுக்கு இடையேயான பயணத் தளமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க:IRCTC யின் பீட்டா புதிய வெப்சைட்டின் மூலம் அதி வேகமாக தத்கால் டிக்கெட் புக்கிங் செய்யலாம் அது எப்படி?
ஊபர் இந்தியா மற்றும் தெற்காசியாவின் வணிக மேம்பாட்டு இயக்குநர் அர்னாப் குமார், இந்தியாவில் ரயில் பயணம் என்பது ரயில் நிலையத்துடன் மட்டும் நின்றுவிடுவதில்லை; அது வீட்டிலிருந்து தொடங்கி, நீங்கள் சேருமிடத்தை அடையும் வரை தொடர்கிறது என்று கூறினார். இக்ஸிகோவின் குழும தலைமைச் செயல் அதிகாரி அலோக் பஜ்பாய் மற்றும் இணை தலைமைச் செயல் அதிகாரி ரஜ்னீஷ் குமார் ஆகியோர், பயணிகளுக்கு அவர்களின் வீட்டு வாசலில் இருந்து சேருமிடம் வரை முற்றிலும் மன அழுத்தமில்லாத மற்றும் தடையற்ற பயண அனுபவத்தை வழங்குவதே இந்தக் கூட்டாண்மையின் நோக்கம் என்று தெரிவித்தனர்.