இந்தியாவின் மிக பெரிய இரண்டாவது டெலிகாம் நிறுவனம் Bharti Airtel ஆகும் இது அதன் கஸ்டமர்களுக்கு புதிய ரூ,1099 யில் வரும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 4G மற்றும் 5G நன்மை பெற முடியும் 300GB வரையிலான டேட்டா நன்மை பெற முடியும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி முழு தகவல் பார்க்கலாம் வாங்க.
ஏர்டெல்லின் புதிய ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.1,099. இது கஸ்டமர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது, அதாவது அவர்கள் சுமார் மூன்று மாதங்களுக்கு கவலையற்ற இன்டர்நெட் மற்றும் காலிங் அனுபவிக்க முடியும்.
இந்தத் திட்டம் பயனர்களுக்கு அன்லிமிடெட் 4G மற்றும் 5G இன்டர்நெட் அக்சஸ் வழங்குகிறது, மேலும் ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300GB அதிவேக டேட்டாவையும் வழங்குகிறது. இதன் பொருள் அதிக இன்டர்நெட் பயனர்கள் கூட தடையின்றி ஸ்ட்ரீம் செய்ய, கேம்களை விளையாட மற்றும் பிரவுசிங் செய்ய முடியும்.
இதையும் படிங்க:வெறும் ரூ,200க்குள் வரும் Jio யின் இந்த திட்டத்தில் 90 நாட்கள் வேலிடிட்டி, ஆனால் இந்த நன்மை இருக்காது
இந்த திட்டம் காலிங் அடிப்படையில் மிகவும் கவர்ச்சிகரமானது. கஸ்டமர்கள் ரோமிங் உட்பட அன்லிமிடெட் காலிற்கு பயனடைவார்கள். கூடுதலாக, தினமும் 100 SMS கிடைக்கின்றன.
இந்தத் திட்டத்தை இன்னும் சிறப்பானதாக்க ஏர்டெல் பல OTT ஆப்களுக்கான அக்சஸ் சேர்த்துள்ளது. கூடுதலாக, கஸ்டமர்கள் இலவச அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தாவைப் பெறுவார்கள், இது அவர்களின் கன்டென்ட் உருவாக்கம் மற்றும் எடிட்டிங் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும்.