2020 ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் செயல்பாடு பற்றிய அறிக்கையை கவுண்ட்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன் விநியோகத்தில் 78 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. திடீர் வளர்ச்சிக்கு ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 11 சீரிஸ் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
அதன்படி இந்திய சந்தையில் இந்த ஆண்டு முதல் காலாண்டு வாக்கில் சியோமி நிறுவனம் 30 சதவீத பங்குகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இதைத் தொடர்ந்து ஏற்கனவே இரண்டாவது இடத்தில் இருந்த சாம்சங் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி விவோ நிறுவனம் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது.
இந்திய சந்தையில் வளர்ச்சியை பதிவு செய்த முதல் மூன்று நிறுவனங்களில் ஒன்றாக ஆப்பிள் இருக்கிறது. இதைத் தொடர்ந்து ரியல்மி மற்றும் ஒப்போ நிறுவனங்களும் அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இரு நிறுவனங்களும் முறையே 119 சதவீதம் மற்றும் 83 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.