online online gaming rulegaming rule
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகேங்கிங்கிலும் ஆன்லைன் Gamer பிரியர்கள் அதிக இருக்கிறார்கள், அதனை தொடர்ந்து இப்பொழுது இந்தியாவில் கேம் பிரியர்களுக்கு மிக பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்த புதிய ஆன்லைன் கேமுக்கு ஒழுங்குமுறைகளை அமல்படுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இவை மே 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
இந்த ஒழுங்குமுறைகள், கேமிங் துறையைச் சீரமைப்பதையும், பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், உண்மையான பண கேமர்களை கடுமையாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. முக்கியமாக, எல்லா கேமர்களுக்கும் ஒரே விதிகள் பொருந்தாது; மாறாக, கேமின் வகையைப் பொறுத்து வெவ்வேறு ஒழுங்குமுறைகள் உருவாக்கப்படும்.
Ministry of Electronics and Information Technology யின் மூலம் கொண்டு வரப்பட்ட புதிய விதியின் படி, பெரும்பாலான ஆன்லைன் கேமர்களுக்கு கட்டாயப் பதிவு தேவைப்படாது, குறிப்பாகப் பணப் பரிவர்த்தனைகள் இல்லாத கேமர்களுக்கும் .
அதாவது இலவச ட்ரூ ப்ளே ஸ்டோர் மற்றும் சோசியல் கேமர்களுக்கு இது முன்பை போல எளிதாக வேலை செய்யும், ம்மேலும் அரசு இது போன்ற அதிக தலையிடாமல் குறைந்தபட்சமாக இருக்கும்
ரியல் மணி கேமிங் என்பது கேமிங்க்கு பணம் வாகுவோர்களுக்கு அதிரடி நடவடிக்கை எடுக்க முடியும் புதிய சட்டம் உண்மையான பண விளையாட்டுகளைத் தடை செய்கிறது. இது, விளையாட்டுகள் மூலம் பணம் சம்பாதிக்கப்படும் அல்லது முதலீடு செய்யப்படும் தளங்களை நேரடியாகப் பாதிக்கும்.
இ-ஸ்போர்ட்ஸ் கேட்டகரியில் வரும் கேமர்கள் ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய வேண்டியது அவசியமாகும், இது இத்துறைக்கு முறையான அங்கீகாரத்தை அளிப்பதோடு, எதிர்காலத்தில் மேலும் ஊக்கமும் பெறக்கூடும்.
அரசு ஒவ்வொரு ஆட்டத்தையும் விசாரிக்காது, ஆனால் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் மட்டுமே இந்த செயல்முறை தொடங்கும். உதாரணமாக, அதிகாரிகளே ஒரு விளையாட்டைக் கவனத்தில் எடுத்துக்கொண்டாலோ, அல்லது அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட விளையாட்டுப் பிரிவை அறிவித்தாலோ, அல்லது மின்விளையாட்டுகள் தொடர்பான நேர்வுகளில் அறிவித்தாலோ, இது தேவையற்ற கண்காணிப்பைத் தவிர்க்கும்.
இதையும் படிங்க அட இனி உங்க ரீச்சார்ஜ் WhatsApp யில் செய்துகொள்ளலாம் வந்தாச்சு சூப்பர் அம்சம்
புதிய விதிகளில் பயனர் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. கேமிங் தளங்களை மேலும் பொறுப்புள்ளவையாக மாற்றும் நோக்கில், இது டேட்டா பாதுகாப்பு, நேர்மையான கேமிங் மற்றும் பயனர் பாதுகாப்பு தொடர்பான பல விதிகளை உள்ளடக்கியுள்ளது.
இந்த விதிகள் இந்தியாவில் உள்ள கேமிங் துறைக்கு ஒரு தெளிவான வழிகாட்டுதலை வழங்கும். இ-ஸ்போர்ட்ஸ் மற்றும் சோசியல் கேமர்ககளை ஊக்குவிக்கப்படும் அதே வேளையில், சூதாட்டம் போன்ற அபாயகரமான கேம்களை கட்டுப்படுத்தப்படும். இது பயனர்கள் மற்றும் உருவாக்குநர்கள் இருவருக்கும் பயனளிக்கும்.