SMS மூலம் கொள்ளையடிக்கும் கும்பல் நம்பி ஏமாந்து போகும் அப்பாவி மக்கள்.

Updated on 19-Feb-2022
HIGHLIGHTS

ஆன்லைன் மூலம் பணத்தை நூதனமாகக் கொள்ளையடிக்கும் ஹேக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உங்களை தொடர்புகொண்டு தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டதாகக் கூறி கால் அல்லது வாட்ஸ்அப் மெசேஜ் செய்தால் உஷாராக இருங்கள்.

தற்பொழுது டிஜிட்டல் மையமாக இந்தியா  மாறியுள்ளது, என்னதான் ஒருபுறம் நமக்கு நன்மை அழித்தலும் மறுபுறம்  நமக்கு பெரும்  பாதிப்பையே  தருகிறது, அந்த வகையில் பெரும்பாலான மக்கள்  ஆன்லைனில் பணத்தின் ட்ரான்செக்சன் செய்கிறார்கள், அது போல்  ஆன்லைன் மூலம் பணத்தை நூதனமாகக் கொள்ளையடிக்கும் ஹேக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

போலி SMS மூலம் கொள்ளை

SMS மூலம் உங்கள் அக்கவுண்டுக்கு குறிப்பிட்ட தொகையை போடப்பட்டதாகவும் அதை  பெறவேண்டும் என்றால் லிங்க் க்ளிக் செய்யுமாறு கேட்கப்படும், அப்படி க்ளிக் செய்யும்போது உங்களின்  சில தகவலை அங்கே கேட்கப்படும் உதரணமாக கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் CVV என், இது தவிர உங்கள் சுய விவரம் மற்றும் பேங்க் அக்கவுண்ட் தகவல் கேட்கப்படும்  அதன் மூலம் உங்களின் மொத்த பணத்தயும் பறிக்கப்படும்.

போலி பேங்க் SMS

உங்கள் வங்கி அக்கௌன்ட் எண்ணிற்குப் பணம் போடப்பட்டதாகக் காட்டப்படும் ஒரு போலி எஸ்எம்எஸ், அதை தவறுதலாக உங்கள் அக்கவுண்டுக்கு அனுப்பபட்டதாகவும் கூறுவார்   அப்படி கூறப்பட்டால் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்  உங்களின் அக்கவுண்டிலிருந்து  பணத்தை பறிக்கப்படும், மேலும் தற்பொழுது அதிக UPI

வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைத் திருடும் கும்பல்

சென்னை அடையாறு போலீஸ் துணை கமிஷ்னர் சமீபத்தில் இந்த பிரச்னை குறித்த எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளார். மக்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைத் திருடுவதற்கு, இந்த திருட்டு கும்பல் இப்படி ஒரு புதிய ரூட்டில் மோசடி செய்து வருகிறது. இந்த முறையைப் பின்பற்றி, இவர்களின் கட்டுக்கதையை நம்பி தமிழ்நாட்டில் பலரும் பணத்தை இழந்துள்ளனர். சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணும் ஏமாற்றப்பட்டுள்ளார்.

வெறும் மெசேஜ் ஸ்கிரீன் ஷாட்டை மட்டும் பார்த்துவிட்டு, தனது வங்கி கணக்கை சோதனை செய்யாமல் அந்த பெண் அவர்கள் கேட்ட பணத்தை மீண்டு தருவதாகத் தெரிவித்திருக்கிறார். பணத்தை பேடியம் மூலம் அனுப்புமாறு அந்த திருட்டு கும்பல் கேட்டதை தொடர்ந்து அப்பெண்ணும் பணத்தை அனுப்பியுள்ளார்.இது போன்ற கும்பலிடமிருந்து எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.

உஷாராக இருப்பது அவசியம்.

தமிழ்நாட்டில் உள்ள பலரும் தங்களின் பணத்தை இழந்துள்ளனர். இனி நீங்கள் உஷாராக இருக்க வேண்டும்  உங்களுக்கு தெரியாத நபர்கள் யாரேனும் உங்களை தொடர்புகொண்டு தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டதாகக் கூறி கால் அல்லது வாட்ஸ்அப் மெசேஜ் செய்தால் உஷாராக இருங்கள்.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :