Gpay Pocket Money
Google யின் GPay புதிய அம்சம் ‘Pocket Money என்ற பெயரில் அறிமுகம், இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் எப்பொழுதும் எளிதாக பணம் அனுப்பலாம் மற்றும் ஸ்மார்ட்டாக மாற்றும், இந்த அம்சத்தின் மூலம் உங்களின் குழந்தைகளோ அல்லது உறவினர்க்கும் தேவைப்படும்போது போதுமான அளவுக்கு பணம் அனுப்பலாம், இனி அதற்காக உங்கள் குழந்தைக்கோ அல்லது உறவினர்க்கோ தனியாக பேங்க் அக்கவுண்ட் திறக்க வேண்டும் என்ற தொல்லை இல்லை, பணம் எங்கே, எப்படிச் செலவிடப்படுகிறது என்பதையும் அவர்களால் கட்டுப்படுத்த முடியும். இந்த அம்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் என்னென்ன விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் விரிவாகப் பார்ப்போம்.
Pocket Money என்பது தற்பொழுது இருக்கும் UPI Circle போன்ற பகுதியாகும், இது பணம் செலுத்துவதை இன்னும் எளிதாகவும் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் ஆக்குகிறது. இதில் ஒரு Primary user ((அதாவது பெற்றோர்/ உறவினர்) இருக்கலாம், இப்பொழுது உங்களின் பேங்க் அக்கவுன்ட் எந்த Secondary user (குழந்தைகள்) பணம் செலவழிக்க அனுமதி வழங்குகிறது.
சுருக்கமாகச் சொன்னால், குழந்தைகள் இனி தங்களின் சிறு தேவைகளுக்கு GPay மூலம் பணம் செலுத்திக்கொள்ளலாம், ஆனால் அந்தப் பணம் பெற்றோரின் அக்கவுன்ட்களிலிருந்து கழிக்கப்படும். மேலும், லிமிட்களும் கட்டுப்பாடும் முழுமையாகப் பெற்றோரின் கைகளில் இருக்கும்.
இதையும் படிங்க:WhatsApp யில் வந்துள்ள புதிய அம்சம், இப்பொழுது நம்பர் இல்லாமல் சேட்டிங் எப்படி செய்வது?
பாக்கெட் மணி அம்சத்தின் மிகப்பெரிய நன்மை அதன் முழுமையான கட்டுப்பாடு மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகும். பெற்றோர்கள் இரண்டு விருப்பங்களிலிருந்து தேர்வு செய்யலாம். முதல் விருப்பத்தில், நீங்கள் மாதத்திற்கு ₹15,000 வரை லிமிட்டை நிர்ணயிக்கலாம். இந்த லிமிட்டிர்க்குள் , ப்ரீபெய்ட் அலவன்ஸைப் போலவே, ஒவ்வொரு முறையும் கேட்கத் தேவையில்லாமல் குழந்தை தானாகவே பணம் செலுத்தலாம்.
இரண்டாவது வழிமுறையில், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் உங்கள் ஒப்புதல் தேவைப்படுகிறது. முதலில் குழந்தை கோரிக்கையைச் சமர்ப்பிக்கும், உங்கள் ஒப்புதலுக்குப் பிறகே பணம் செலுத்தப்படும். இது சிறு குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது.
மேலும், பாதுகாப்பு நோக்கங்களுக்காக KYC சரிபார்ப்பு தேவைப்படுகிறது. பெற்றோர்கள் தங்களது உறவுமுறையையும் அரசாங்க அடையாள அட்டையையும் உறுதிப்படுத்த வேண்டும். இது அமைப்பை வெளிப்படைத்தன்மையுடன் வைத்திருப்பதோடு, தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது.