ஸ்மார்ட்போன் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியுமா? என்ற கேள்வியை யாரும் உங்களிடம் கேட்டால், 'முடியும்' என்று இனி உறுதியாகச் சொல்லுங்கள். அது எப்படிப்பா முடியும் என்று கேட்டால், இந்த பதிவை முழுமையாக படித்துவிட்டு உங்களின் அறிவுரையை அவர்களுக்கும் வழங்குகள். உண்மையைச் சொல்லப் போனால், ஸ்மார்ட்போன் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயன்முறையை வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் உருவாக்கி வருகிறது. அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
வாட்ஸ்அப் சமீபத்தில் மல்டி டிவைஸ் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இது ஒரு பயனர் தங்கள் முதன்மை ஸ்மார்ட்போனிலிருந்து சுயாதீனமாக நான்கு சாதனங்களில் அவர்களின் அதே வாட்ஸ்அப் கணக்கை வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்த அனுமதிக்கிறது. முக்கியமாக, ஸ்மார்ட்போனில் செயலில் உள்ள இணைய இணைப்பு இல்லாமல் பயனர்கள் தங்கள் டெஸ்க்டாப், லேப்டாப், டேப்லெட் அல்லது வேறு எந்த சாதனத்திலும் WhatsApp பயன்பாட்டை இனி பயன்படுத்த முடியும்.
இந்த அம்சம் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பாதுகாப்பு அம்சத்தை ஆதரிக்கிறது என்பதனால் வெவ்வேறு சாதனங்களில் நீங்கள் வாட்ஸ்அப் தளத்தைப் பயன்படுத்தினாலும், அது முழுமையாகப் பாதுகாக்கப்படுகிறது. எனவே இதன் மூலம் செய்யப்படும் அனைத்து சாட்களும் பாதுகாப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட்போன் இல்லாமல் கணினியில் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன் இல்லாமல் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த, பயனர்கள் வாட்ஸ்அப் வெப், டெஸ்க்டாப் அல்லது போர்ட்டல் உட்பட, அவர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பின் பதிப்போடு தங்கள் ஸ்மார்ட்போனை இணைக்க வேண்டும். இருப்பினும், இந்த புதிய அம்சத்துடன் உங்களின் செயல்முறையை ஒரு முறை மட்டும் செய்தால் போதுமானது.
முன்பு குறிப்பிட்டபடி, ஒரு பயனர் 4 சாதனங்களைச் சேர்க்கலாம், அவை சுயாதீனமாகப் பயன்படுத்தப்படலாம். பயனர் ஒரு புதிய சாதனத்தைச் சேர்க்கும்போது, முதன்மை மொபைல் சாதனத்தில் அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட செய்திகள் மற்றும் மீடியாவை ஒத்திசைக்க WhatsApp வெப்பில் சிறிது நேரம் எடுக்கலாம் என்பதனால் பொறுமையாக இருப்பது நல்லது. இருப்பினும், சாதனம் இணைக்கப்பட்டவுடன், அது செயலில் உள்ள இணைய இணைப்பில் செய்திகளை முழுமையாக அனுப்பும் மற்றும் பெறும். இந்த மல்டி டிவைஸ் அம்சம் இன்னும் ஆரம்ப வளர்ச்சி அவும்.ல்லது பீட்டா கட்டத்தில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.