அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான BSNL பல சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. பயனர்களைப் பற்றிப் பேசும்போது, அவர்கள் அந்தத் திட்டங்களை அதிகம் விரும்புகிறார்கள், இதில் இலவச அழைப்பு வசதியும் சிறந்த தரவு நன்மையுடன் வழங்கப்படுகிறது. இந்த பயனர்களுக்கு, பிஎஸ்என்எல் ரூ .485 திட்டத்தை வழங்குகிறது. இந்தத் திட்டம் தினசரி டேட்டா மற்றும் அன்லிமிட்டட் வொய்ஸ் காலிங்கின் நன்மைகளை நீண்ட வேலிடிட்டியுடன் வழங்குகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 485 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து உள்ளது. இந்த சலுகை 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. மேலும் இதில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
டேட்டா மட்டுமின்றி அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்களும் வழங்கப்படுகிறது. முன்னதாக பிஎஸ்என்எல் காம்போ சலுகை பலன்கள் மாற்றப்பட்டு தினமும் 250 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால் வழங்கப்பட்டது.
புதிய சலுகையை ஏர்டெல் ரூ. 598 சலுகையுடன் ஒப்பிடும் போது, பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோன்று வி ரூ. 555 சலுகையும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இந்த வரிசையில் பிஎஸ்என்எல் மட்டுமே குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி வழங்குகிறது.
4ஜி நெட்வொர்க் இல்லாததால் பல வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவையில் இருந்து விலக துவங்கி உள்ளனர். இந்நிலையில், மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் விரைவில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்கு அனுமதி வழங்க இருக்கிறது.