#BSNL 4G Launch in Tiruvallur district
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) யின் 4G சேவையை வெள்ளிகிழமை தமிழ்நாட்டில் திருவள்ளுவர் பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் IX.2 கட்ட திட்டத்தின் கீழ் 4G சேவைகளை விரைவில் தொடங்க bsnl தயாராகி வருகிறது. தகவல்படி, நிறுவனம் 2,114 4ஜி டவர்களை கட்டம் IX.2 திட்டத்தின் கீழ் இன்ஸ்டால் செய்யப்பட்டு தற்போது நான்கு மாவட்டங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் நொச்சிலி, கொளத்தூர், பள்ளிப்பேட்டை, திருவெள்ளவயல், பொன்னேரி, அத்திப்பேடு, அண்ணாமலைச்சேரி, திருப்பாலைவனம், எலவேம்பேடு, மீஞ்சூர், LNT கப்பல் கட்டும் தளம் காட்டுப்பள்ளி, வீரனாத்தூர், ஸ்ரீகாளிகாபுரம், வங்கனூர், RKபெட் ஆகிய பகுதிகளில் பிஎஸ்என்எல் 4ஜி மொபைல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூலை 5, 2024 அன்று, BSNL சென்னை X(முன்பு ட்விட்டர்) யில் கூறியது.
4G செஜுரேசன் திட்டத்தின் கீழ் இந்த குறிப்பிடத்தக்க நடவடிக்கை ‘மேக் இன் இந்தியா’ முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இந்த திட்டமானது மையத்தின் niversal Service Obligation (USO) நிதியத்தால் நிதியளிக்கப்படுகிறது, திட்டச் செலவு ரூ.16.25 கோடி என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த மைல்கல், டிஜிட்டல் பிளவைக் குறைக்கவும், கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கவும் நிறுவனத்தின் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 4ஜி சேவையை BSNL சென்னை போனின் சீப் ஜெனரல் மேனேஜர் ஒரு விழாவில் துவக்கி வைத்ததாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆத்மநிர்பார் பாரத் (Self-Reliant India) முயற்சியின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 10,000 4G தளங்களை வெற்றிகரமாக பயன்படுத்தியுள்ளதாக BSNL சமீபத்தில் அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் விரைவில் மைசூரு, மாண்டியா, சாமராஜநகர் மற்றும் கர்நாடகாவில் குடகு மாவட்டங்களில் தனது 4ஜி சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது. மே மாதம், பிஎஸ்என்எல் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் 4ஜியை அறிமுகப்படுத்தியது, இது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
இதையும் படிங்க: BSNL யில் இனி நெட்வர்க் பிரச்சனே இருக்காது 10,000 4G டவர் நட்டுவைப்பு