BSNL 4G சேவை நம்ம திருவள்ளூர்க்கும் வந்தாச்சு தமிழ்நாடு மக்கள் குஷி

HIGHLIGHTS

(BSNL) யின் 4G சேவையை வெள்ளிகிழமை தமிழ்நாட்டில் திருவள்ளுவர் பகுதியில் அறிமுகம்

பிஎஸ்என்எல் 4ஜி மொபைல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது

ஜூலை 5, 2024 அன்று, BSNL சென்னை X(முன்பு ட்விட்டர்) யில் கூறியது.

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) யின் 4G சேவையை வெள்ளிகிழமை தமிழ்நாட்டில் திருவள்ளுவர் பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் IX.2 கட்ட திட்டத்தின் கீழ் 4G சேவைகளை விரைவில் தொடங்க bsnl தயாராகி வருகிறது. தகவல்படி, நிறுவனம் 2,114 4ஜி டவர்களை கட்டம் IX.2 திட்டத்தின் கீழ் இன்ஸ்டால் செய்யப்பட்டு தற்போது நான்கு மாவட்டங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

BSNL 4G திருவள்ளுவர் எந்த இடத்தில் வந்து இருக்கு

தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் நொச்சிலி, கொளத்தூர், பள்ளிப்பேட்டை, திருவெள்ளவயல், பொன்னேரி, அத்திப்பேடு, அண்ணாமலைச்சேரி, திருப்பாலைவனம், எலவேம்பேடு, மீஞ்சூர், LNT கப்பல் கட்டும் தளம் காட்டுப்பள்ளி, வீரனாத்தூர், ஸ்ரீகாளிகாபுரம், வங்கனூர், RKபெட் ஆகிய பகுதிகளில் பிஎஸ்என்எல் 4ஜி மொபைல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூலை 5, 2024 அன்று, BSNL சென்னை X(முன்பு ட்விட்டர்) யில் கூறியது.

நிதியின் மொத்த செலவு எவ்வளவு

4G செஜுரேசன் திட்டத்தின் கீழ் இந்த குறிப்பிடத்தக்க நடவடிக்கை ‘மேக் இன் இந்தியா’ முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இந்த திட்டமானது மையத்தின் niversal Service Obligation (USO) நிதியத்தால் நிதியளிக்கப்படுகிறது, திட்டச் செலவு ரூ.16.25 கோடி என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Bsnl 4G

இந்த மைல்கல், டிஜிட்டல் பிளவைக் குறைக்கவும், கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கவும் நிறுவனத்தின் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 4ஜி சேவையை BSNL சென்னை போனின் சீப் ஜெனரல் மேனேஜர் ஒரு விழாவில் துவக்கி வைத்ததாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சமிபத்தில் BSNL 4G இந்த இடங்களில் அறிவிக்கப்பட்டது

ஆத்மநிர்பார் பாரத் (Self-Reliant India) முயற்சியின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 10,000 4G தளங்களை வெற்றிகரமாக பயன்படுத்தியுள்ளதாக BSNL சமீபத்தில் அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் விரைவில் மைசூரு, மாண்டியா, சாமராஜநகர் மற்றும் கர்நாடகாவில் குடகு மாவட்டங்களில் தனது 4ஜி சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது. மே மாதம், பிஎஸ்என்எல் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் 4ஜியை அறிமுகப்படுத்தியது, இது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

இதையும் படிங்க: BSNL யில் இனி நெட்வர்க் பிரச்சனே இருக்காது 10,000 4G டவர் நட்டுவைப்பு

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :