இலவச சர்விசை நிறுத்தி வைத்தது BSNL

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ஞாயிற்றுக் கிழமைகளில் வழங்கி வந்த இலவச அழைப்பு சலுகையை பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் BSNL லேண்ட்லைனில் அனைத்து கால்களும் இலவசம் என்ற சலுகை திட்டத்தை செயல்படுத்தி வந்தது.

இந்நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் இச்சலுகையை நிறுத்துவதாக அறித்துள்ளது. மேலும், இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இலவசமாக பேசும் சலுகைக்கான கால அளவை இரவு 10.30 முதல் காலை 6 மணியாக குறைத்துள்ளது. இதனால் பிஎஸ்என்எல் கஸ்டமர்களை அதிருப்தியடைந்துள்ளனர்.

ஜியோ வருகையால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்தித்து வருவதால் பிஎஸ்என்எல் இதே காரணத்தால் இது போன்ற சலுகைகளை நிறுத்துகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :