அதன் சாம்சங் கேலக்சி S10 சீரிஸ் அறிமுகம் செய்த பிறகு நிறுவனம் இப்பொழுது அதன் Samsung Galaxy Note 10 வரிசையில் அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது.இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால், கடந்த ஆண்டு அதன் சாம்சங் கேலக்சி Note 9 சீரிஸ் ஆகஸ்ட் 9 தேதி அறிமுகம் செய்யப்பட்டது, இப்பொழுது புதிய தாவல் வந்ததை வைத்து பார்த்தால்,சாம்சங் கேலக்சி நோட் 10 ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யும். இதன் அர்த்தம் நிறுவனம் அதன் கடந்த ஆண்டு பரம்பரையின் கீழ் வேலை செய்து வருகிறது.
கடந்த ஆண்டு கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு, ஆகஸ்டு 24 ஆம் தேதி விற்பனைக்கு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு இதன் விற்பனை ஆகஸ்டு 25 ஆம் தேதி துவங்கும் என கூறப்படுகிறது.
இம்முறை கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதன் ப்ரோ வேரியண்ட் பட்டன்கள் நீக்கப்பட்டு பிரெஷர் சென்சிட்டிவ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் என தெரிகிறது. கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் இரு வேரியண்ட்களிலும் பிக்ஸ்பி பட்டன் நீக்கப்படும் என கூறப்படுகிறது.
புதிய கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் துவக்க விலை 1100 டாலர்கள் முதல் 1200 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.76,000-ரூ.83,000) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.
முன்னதாக கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனின் வெளியீடு ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டது. பின் ஸ்மார்ட்போனில் பிழை இருப்பது உறுதி செய்யப்பட்டு, வெளியீடு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. பின் ஸ்மார்ட்போனிற்கு சாம்சங் பெற்ற முன்பதிவு தொகையையும் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப வழங்கியது.
இதுதவிர வெளியாகி இருக்கும் மற்றொரு தகவலில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனினை அடுத்த மாதம் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. இதற்கான நிகழ்வு இந்த மாதம் நடைபெற்று ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூலையில் துவங்கும் என தெரிகிறது.