UPI-யின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக, National Payments Corporation of India (NPCI) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஜூலை 31, 2025-க்குள், பேங்க்கள் மற்றும் பேமன்ட் சேவை வழங்குநர்கள் (payment service providers(PSP-கள்) பொதுவாகப் பயன்படுத்தப்படும் 10 UPI API-களின் (ஆப்ளிகேசன் ப்ரோக்ராமிங் இன்டர்பேஸ்) பயன்பாட்டை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஆகஸ்ட் 1, 2025 முதல், UPI ஆப்கள் ஒரு நாளில் பேலன்ஸ் என்கொயரி , ட்ரேன்செக்சன் ஸ்டேட்டஸ் வேரிபிக்சன் மற்றும் ஆட்ட பேமன்ட் ஆணையை நிறைவேற்றுதல் உள்ளிட்ட API-களின் ஆப் யின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும். அதிக பயன்பாட்டு அளவு UPI நெட்வொர்க்கில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை ஏற்படுத்தி, செயலிழப்பை ஏற்படுத்தியது.
புதிய NPCI யின் புதிய UPI விதி என்ன முழு தகவல் பார்க்கலாம் வாங்க.
NPCI யின் அறிக்கையின் படி பார்த்தால் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 1 முதல் கஸ்டமர்கள் பேலன்ஸ் என்கொயரி 1 நாளைக்கு 50 முறை மட்டுமே பெற முடியும் என லிமிடெட் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக UPI ஆப்கள் இந்த நெரிசலை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அதாவது இது, காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 9:30 மணி வரை , இதன் லிமிட்டை நிர்ணயிக்க மற்றும் நோன் கஸ்டமர் பேமன்ட் ரெகுவஸ்ட் கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன. மேனுவல் பேலன்ஸ் வெரிபிகேசன் தவிர்க்க, ஒவ்வொரு ட்ரேன்செக்சன் பிறகும் பயனருக்கு அக்கவுன்ட் பேலன்ஸ் நோட்டிபிகேசன் அனுப்பவும் பேங்க்கள் அறிவுறுத்தப்படுகின்றன.
இதேபோல், ஆட்டோபே ஆணைகள் நோன் பீக் நேரங்களிலும், மிதமான ட்ரேன்செக்சன் -ஒரு-வினாடி (TPS) விகிதங்களிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆட்டோபே ஆணையும் ஒரு முயற்சி மற்றும் மூன்று மறு சோதனைகள் வரை கொண்டிருக்கலாம்.
மேலும், பயனரின் மொபைல் நம்பருடன் தொடர்புடைய அனைத்து அக்கவுண்ட்களின் லிஸ்ட்டையும் காண்பிக்கும் லிஸ்ட் அக்கவுன்ட் ரெகுவஸ்ட் , 24 மணி நேரத்திற்குள் ஒரு பயன்பாட்டிற்கு 25 முறை மட்டுமே தொடங்க முடியும். குறிப்பாக, வாடிக்கையாளர் UPI பயன்பாட்டில் வழங்கும் வங்கியைத் தேர்ந்தெடுத்த பின்னரே இதைத் தொடங்க முடியும்.
இந்த புதிய விதிகளுக்கு இணங்குவதை உறுதிப்படுத்தும் முறையான உறுதிமொழியை PSPகள் ஆகஸ்ட் 31, 2025 க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் NPCI கூறியுள்ளது. இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் API கட்டுப்பாடுகள், பண அபராதங்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர் சேர்க்கையை நிறுத்தி வைப்பது போன்ற கடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும்.
இதையும் படிங்க:WhatsApp அதன் iPad பயனர்களுக்கு புதிய ஆப் ஒரே நேரத்தில் பல பேருடன் இனித்திருக்க முடியும்