BGMI பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி மக்களின் டேட்டாவை விற்றதாக FIR வழக்கு நடந்தது என்ன பாருங்க

Updated on 08-Apr-2025

Battlegrounds Mobile India (BGMI) கேம் பிரியரா நீங்க அப்போ உங்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியாக இருக்கலாம் அதாவது BGMI யின் வெளியிட்டாளர் ஆன Krafton தனி உரிமை மீறுதல் மற்றும் சட்டவிரோதமான டேட்டாவை விற்று பணமாகுதல் போன்ற பல சிக்கலில் சிக்கியுள்ளது . இந்த வழக்கானது மகராஷ்டிரா சார்ந்த, சந்தோஷ் டோரனே இந்த கேமிங்க் ஜாம்பவான் வீதியை மீறி ரகசியமாக பயனர் டேட்டாவை டெலிக்ரமுக்கு விற்றதாக FIR பதிவு செய்தார், அதனை தொடர்ந்து இந்த வழக்கை மும்பை உச்சநீதிமன்றம் அடுத்த வாரத்திற்க்கு ஒத்தி வைத்துள்ளது மேலும் இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

இந்த BGMI FIR எப்பொழுது பதிவு செய்யப்பட்டது

FIR அறிக்கையின் படி பார்த்தால் இந்த வழக்கு செப்டம்பர் 5, 2024, யில் அக்லுஜ் போலிஸ் ஸ்டேசனில் பதிவு செய்யப்பட்டது, இந்த FIR Krafton 4 அதிகாரிகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது இதில் வூயோல் லிம், ஜிதேந்திர பன்சால், யூனல் சோனி மற்றும் வூயோல் ஷாலோம் – பெயரிடப்பட்டு, ஆகஸ்ட் 2, 2021 அன்று கையெழுத்திடப்பட்ட சட்டப்பூர்வ சேவை ஒப்பந்தத்தை நிறுவனம் மீறியதாகக் கூறப்பட்டது. டெலிகிராம் போன்ற மூன்றாம் தரப்பு தளங்கள் மூலம் கிராஃப்டன் சந்தாதாரர் தரவை ஒரு பயனருக்கு சுமார் ரூ.2,000க்கு விற்றதாகவும், இது பயனர் தனியுரிமையை மீறுவதாகவும் அவர் கூறினார்.

மேலும் இதனை தொடர்ந்து இந்த வழக்கில் குற்றவியல் சதி (120-B), ஏமாற்றுதல் (420), மற்றும் 2000 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 72, 72A மற்றும் 85 இன் மீறல்கள் உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் உள்ளூர் காவல்துறை மற்றும் சோலாப்பூர் எஸ்பியிடம் கவலைகளை எழுப்பிய போதிலும், குறிப்பிடத்தக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், அதனால் தான் நீதித்துறையை அணுகியதாகவும் டோர்னான்மே கூறினார். ஆகஸ்ட் 28, 2024 அன்று, மல்ஷிராஸில் உள்ள முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்திரேட், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 156(3) இன் கீழ் முழுமையான விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

குற்றச்சாட்டுகள் “கடுமையான கவலைக்குரியவை” என்றும், உடனடி கவனம் தேவை என்றும் அறிவித்த நீதிபதி, முறையான விசாரணையின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்

Krafton கூறியது என்ன

இந்த வழக்கிற்க்கு பதோயலளித்த “KRAFTON நிறுவனத்தில், தனிப்பட்ட தேட்டக்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது, மேலும் டேட்டா பாதுகாப்பின் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். கூறியது இருப்பினும் இந்த விஷயம் தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால், சட்ட செயல்முறை முடிவடையும் வரை காத்திருப்பது நல்லது மேலும் இந்த விசாரணையின் பின் வழங்கப்படும்

நீதிபதிகள் சாரங் வி. கோட்வால் மற்றும் டாக்டர் நீலா கோகலே ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்திடமிருந்து இரு தரப்பினருக்கும் நோட்டீஸ்கள் வந்துள்ளன. இந்த மனுக்கள் விசாரணைக்காக இணைக்கப்பட்டுள்ளன. அடுத்த நீதிமன்ற தேதி, அதாவது ஏப்ரல் 15, 2025 வரை, அனைத்து இடைக்கால உத்தரவுகளும் இன்னும் அமலில் உள்ளன.

இதையும் படிங்க LPG, UPI, மற்றும் Toll Tax அனைத்து ரூல் April,1 2025 இன்று முதல் இந்த 10 அதிரடி மாற்றம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :