உலகிலேயே அதி வேகமாக UPI மூலம் பணம் செலுத்தும் நாடாக இந்தியா மாறியுள்ளது.UPI (UPI Unified Payments Interface) பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதன் காரணமாக. ஒரு IMF குறிப்பு இதை எடுத்துக்காட்டுகிறது, UPI மாதந்தோறும் 18 பில்லியனுக்கும் அதிகமான ட்ரேன்செக்சன் செயல்படுத்துகிறது மற்றும் தினசரி ட்ரேன்செக்சன்களில் விசாவை முந்தியுள்ளது என்று கூறுகிறது.
நிதி அயோக்கின் முன்னால் தலைமை அதிகாரி Amitabh Kant, தனது ட்விட்டர் X பக்கத்தில் UPI ட்ரேன்செக்சன் விசாவை விட முந்தி உலகிலே முதல் இடத்தில் இருப்பதாகவும் மேலும் தினசரி 650 மில்லயன்ட்ரேன்செக்சன் நடப்பதாக தெரிவித்துள்ளார்.
இது வெறும் 9 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய வளர்ச்சியை அடைந்தாக கூறியுள்ளார் இதன் மூலம் உலகிலே UPI பெமண்டான டிஜிட்டல் உலகத்தில் இந்தியா தான் முதல் இடத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதை அடுத்து மேலும் ஒரு தனி போஸ்ட்டில் ex-G20 Sherpa பிரதமர் நரேந்திர மோடியை டெக் செய்து இது ஒரு குறிப்பிட தக்க சாதனை என கூறியுள்ளார்.
ஆலோசனை நிறுவனமான PwC யின் அறிக்கை, கடந்த 12 ஆண்டுகளில் ரீடைலர் டிஜிட்டல் ட்ரேன்செக்சன் சுமார் 90 மடங்கு அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது. UPI யின் அம்சங்களை அதிகரிக்க NPCI திட்டமிட்டுள்ளது. UPI பரிவர்த்தனைகள் இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன – நபருக்கு நபர் (P2P) மற்றும் நபருக்கு பிஸ்னஸ் (P2M). NPCI UPIக்கு 20 முதல் 30 கோடி புதிய பயனர்களைச் சேர்க்க இலக்கு வைத்துள்ளது. இந்த கட்டண முறையின் ரீடைளர் பயனர்களின் எண்ணிக்கை 45 கோடிக்கும் அதிகமாகும்.
UPI 2016 ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகமானது அதன் பிறகு மக்கள் பயன்பாட்டிற்காக (BHIM) app டிசம்பர் மாதம் 2016 அறிமுகம் செய்யப்பட்டது.
UPI’ வளர்ச்சின் முக்கிய காரணம்
UPI 2016 யில் அறிமுகமாகி தற்பொழுது உலகின் பாஸ்டஸ்ட் ரீடைளர் பேமன்ட் சிஸ்டமாக 18 பில்லியன் வரை அதிகரித்துள்ளது.
உலகளவில் UPI ஆனது Visa இட தினசரி ட்ரேசெக்சனில் முந்தி சென்று விசாவின் 639 மில்லியனை பின்னுக்கு தள்ளி 650.26 மில்லியனாக அதிகரித்துள்ளது, அதாவது UPI ட்ரேன்செக்சன் உடன் ஒப்பிடும்போது வெறும் 7 நாடுகளில் மட்டுமே UPI இருக்கிறது ஆனால் visa சுமார் 200 நாடுகளில் இருந்தாலும் பின்னே தான் இருக்கிறது.
இயங்குதன்மை மற்றும் நிதி உள்ளடக்கம்: UPI-யின் இயங்குதன்மை, வெவ்வேறு பேமண்ட் வழங்குநர்களின் பயனர்களிடையே தடையற்ற கட்டணங்களை அனுமதிக்கிறது, இது அதன் பரவலான ஏற்றுக்கொள்ளலுக்கும் பணத்தின் மீதான சார்பைக் குறைப்பதற்கும் பங்களிக்கிறது. இது நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது, மில்லியன் கணக்கானவர்களை முறையான நிதி அமைப்பிற்குள் கொண்டுவருகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.