WhatsApp screen sharing
WhatsApp Screen sharing scam: இன்றைய காலகட்டத்தில், சைபர் குற்றவாளிகள் புதிய வழிகளில் மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஒரு காலத்தில் OTP-ஐ எடுத்து வங்கிக் அக்கவுன்ட்களில் இருந்து பணத்தை திருடி வந்தனர், ஆனால் இப்போது தொழில்நுட்ப யுகத்தில், மோசடி செய்வதற்கான நவீன முறைகள் பின்பற்றப்படுகின்றன. OneCard மற்றும் பல வங்கிகள் ‘WhatsApp Screen Mirroring Fraud’ பற்றி கஸ்டமர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்த மோசடி மூலம், குற்றவாளிகள் உங்கள் போன் மற்றும் தனிப்பட்ட தகவல்களை நேரடியாக அணுகலாம். அவர்கள் ஸ்க்ரீன் ஷேரிங் அல்லது ஒரு ஆப்பை டவுன்லோட் செய்ய உங்களிடம் கேட்கலாம்.
இந்த மோசடிக்காரர் கால் செய்ய ஆரம்பிப்பார் . மோசடி செய்பவர் தன்னை ஒரு பேங்க் அல்லது ஒரு பிரபலமான நிறுவனத்தின் ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். உங்கள் பேங்க் அக்கவுண்டில் ஒரு சிக்கல் இருப்பதாகவும், அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். இது மக்களை பீதியடையச் செய்கிறது, மேலும் அவர்கள் அவரது வார்த்தைகளுக்கு ஏமாறுகிறார்கள். சிக்கலைத் தீர்க்க, உங்கள் போன் ஸ்க்ரீனை ஷேர் வேண்டும் என்று மோசடி உறுதியளிக்கிறது. சிக்கலைத் தீர்க்க இதுவே ஒரே வழி என்று அவர் கூறுகிறார். ஸ்க்ரீனை ஷேர் செய்து இயக்கவும், இதுநம்பிகயனது என உங்களை ஏமாற்றுகிறார்கள் , வாட்ஸ்அப் வீடியோ காலை தொடங்க அவர் உங்களிடம் கேட்கிறார்.
இதேபோன்ற ஒரு ஆலோசனையை கனரா வங்கியும் பகிர்ந்து கொண்டுள்ளது, அதில் பயனர்கள் எந்த சூழ்நிலையிலும் ஸ்க்ரீன் ஷேரிங் செய்யக்கூடாது என்று தெளிவாக எச்சரிக்கப்பட்டுள்ளது, மற்ற நபர் எவ்வளவு நம்பகமானவராகத் தோன்றினாலும் சரி. உண்மையான வங்கி அதிகாரிகள் ஒருபோதும் வாடிக்கையாளர்களிடம் திரைப் பகிர்வு அல்லது OTP கேட்க மாட்டார்கள் என்றும் வங்கி மீண்டும் வலியுறுத்தியது. அதாவது, யாராவது இந்த தகவலை உங்களிடமிருந்து எடுத்துக்கொண்டால், அது ஒரு மோசடி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
சந்தேகத்திற்கிடமான எந்தவொரு செயல்பாட்டையும் உடனடியாக தேசிய சைபர் குற்ற அறிக்கையிடல் போர்ட்டலுக்கு (https://cybercrime.gov.in/) புகாரளிக்கவும் அல்லது தேசிய சைபர் குற்ற உதவி எண் 1930 ஐ அழைக்கவும்.
இத்தகைய மோசடிகளின் அதிகரிப்பு, டிஜிட்டல் மோசடி செய்யும் சைபர் குற்றவாளிகள் இன்று எவ்வளவு முன்னேறிவிட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. அவர்கள் சமூக பொறியியல், போலி அழைப்புகள் மற்றும் இப்போது திரை பகிர்வு போன்ற முறைகள் மூலம் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். இதன் பொருள் நாம் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பக்கூடாது, ஆனால் நம்மை நாமே விழிப்புடன் இருக்க வேண்டும்.