India-Pakistan போர் அல்லது எமர்ஜன்சியில் இந்த 5 கேட்ஜட் கையில் ரெடியா வக்சிகொங்க மக்களே

Updated on 07-May-2025

India-Pakistan ஏப்ரல் 22 அன்று பஹல்கம் தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் மேல் தாக்குதலில் தங்களின் உயிரை இழந்தனர் இதன் காரணமாக இதற்க்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பாக்கிஸ்தான் மீது ஒப்பரேசன் சிந்தூர் (Operation Sindoor) தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஒன்பது முக்கிய பயங்கரவாத மறைவிடங்கள் குறிவைக்கப்பட்டன. தற்போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் உச்சத்தில் உள்ளது.

இதில் எச்சர்க்கையாக இருக்கும் விதமாக மே 7 வந்த அறிக்கையின் படி இந்திய எல்லையில் பல மடங்கு பாதுகாப்பு பலப்படுத்தியுள்ளது மேலும் மக்களுக்கு Mock Trill அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது இதில் விமானத் தாக்குதல் சைரன் மற்றும் மொபைல் எச்சரிக்கை போன்ற அவசர தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால் நாம் எப்பொழுதும் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகும் எனவே நாங்கள் உங்களுக்கு இது போன்ற எதிர்பாராத சமயத்தில் இந்த 5 கேட்ஜெட் இருப்பது அவசியமாகும் அவை என்ன என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Emergency Alert Radio அல்லது Portable FM Radio

மொபைல் நெட்வொர்க் செயலிழந்தாலோ அல்லது இன்டர்நெட் துண்டிக்கப்பட்டாலோ, தகவலுக்கு மிகவும் நம்பகமான ஆதாரம் ரேடியோ தான். இப்போதெல்லாம், சிறிய மற்றும் பேட்டரி மூலம் இயக்கப்படும் FM/AM ரேடியோக்கள் சந்தையில் கிடைக்கின்றன, அவை அரசாங்கத்திற்கும் உள்ளூர் மக்களுக்கும் சிக்னல் பெறுவது குறித்த அப்டேட்களை வழங்க முடியும். சில மாடல்கள் சோலார் சார்ஜிங் அல்லது ஹேண்ட் க்ராங்க் சார்ஜருடன் வருகின்றன.

சோலார்-பவர் எஹை கெப்பாசிட்டி கொண்ட பவர் பேங்க் (20,000mAh அல்லது அதற்க்கு அதிகமான பவர் கொண்டது)

வேலைநிறுத்தங்கள், இயற்கை பேரழிவுகள் அல்லது பவர் கட்டின் போது மின் தடை ஏற்படுவது பொதுவானது. சோலார் பவர் பேங்க் உங்கள் போன், ரேடியோ அல்லது டார்ச் லைட்டை சார்ஜ் செய்து வைத்திருக்கும். அதிக பவர் கொண்ட (20,000mAh+), பல USB போர்ட்கள் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் கூடிய பவர் பேங்கை நீங்கள் வாங்கலாம். மேலும் இது நேரடியாக சூரியன் வெளுச்சத்தில் மூலம் சார்ஜ் ஆகும் டிவைஸ் ஆகும்.

Emergency Mobile Alert System

அரசு பக்கத்திலிருந்து பேணிக் அலர்ட் மற்றும் ஆம்பர் சைரன் போன்ற தொழில்நுட்பங்கள் இப்போது மொபைல் எச்சரிக்கைகள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் போனில் அரசாங்க எச்சரிக்கை செட்டிங் இயக்கப்பட்டிருக்க வேண்டும், மேலும் போன் Android அல்லது iOS யின் சமீபத்திய வெர்சனில் இருக்க வேண்டும். பழைய போன்களில் இந்த அலர்ட் சப்போர்ட் செய்யாது.

portable வாட்டர் ப்யுரிபயர்

அவசரகாலத்தில், சுத்தமான குடிநீர் விநியோகம் தடைபடலாம். போர்ட்டபிள் வாட்டர் ப்யுரிபயர் மெஷின் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நீரினால் பரவும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. நீங்கள் எடுத்துச் செல்லக்கூடிய UV-அடிப்படையிலான வாட்டர் ப்யுரிபயர் தேர்வுசெய்யலாம். இவை சிறியவை, பயன்படுத்த எளிதானவை மற்றும் 99.9% பாக்டீரியா/வைரஸ் நீக்கும் பில்ட்டர் ஆகும்.

சோலார் டார்ச் உடன் இன்பில்ட் சைரன்

குறைந்த வெளுச்சம் அல்லது பவர்கட்டில் இருக்கும்போது மிகவும் சக்தி வாய்ந்த டச் லைட் அவசியமாகும், மேலும் இன்றைய காலத்தில் இன்பில்ட் சைரன் வசதியுடன் டார்ச் லைட் வர ஆரம்பித்துள்ளது, மேலும் எதாவது அவசரம் நிலையில் இருக்கும்போது எச்சர்க்கைக்கு உதவும் மேலும் இது சிறிய சைஸில் மிகவும் காம்பேக்ட் மற்றும் மிக சிறந்த பேக்கப் தரும்.

எமர்ஜன்சி மெடிக்கல் கிட்

போர் அல்லது பேரிடர் காலங்களில், மருத்துவமனைகளுக்கான அணுகல் குறைவாக இருக்கலாம். முதலுதவி பெட்டி வீட்டில் அடிப்படை சுகாதார பிரச்சினைகளை நிர்வகிக்க உதவுகிறது. எனவே, வீட்டில் கிருமி நாசினிகள், வலி ​​நிவாரணிகள், அத்தியாவசிய மருந்துகள், டிஜிட்டல் தர்மாமீட்டார் மற்றும் பல்ஸ் ஆக்சிமீட்டர் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க:மே 7 உங்க போனுக்கு வந்தாத அந்த எச்சரிக்கை, வரவில்லை என்றால் உடனே செய்யுங்க இந்த செட்டிங்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :