கூகுள் நிறுவனத்தின் புதிய அம்சம் Sodar என்ற பெயரில் அறிமுகம்.
சமூக இடைவெளியை கடைப்பிடிக்க புதிய கூகுள் நிறுவனம் உருவாக்கி உள்ளது.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க
கூகுள் நிறுவனத்தின் புதிய அம்சம் சோடார் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் பயனரின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கேமராக்களில் ஒன்றிணைந்து இயங்குகிறது. இந்த அம்சத்தினை இயக்கியதும், பயனர்களை இது வட்டத்தில் நிறுத்துகிறது.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க புதிய வழிமுறையினை கூகுள் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதை கொண்டு மக்கள் பொது வெளியில் செல்லும் போது சமூக இடைவெளியை மீறுகிறோமா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
ஸ்மார்ட்போனினை நடுவில் வைத்துக் கொண்டு நடக்கும் போது, அவர்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் திரையில் அதற்கான எச்சரிக்கை தகவல் தெரியும். இவ்வாறு பொதுவெளியில் செல்லும் போது சமூக இடைவெளியினை மிக துல்லியமாக கடைப்பிடிக்க முடியும்.
போக்கிமான் கோ போன்ற கேமினை போன்றே புதிய அம்சமும் இயங்குகிறது. சமூக இடைவெளிக்கென பரிந்துரைக்கப்பட்ட அளவினை இது ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீனில் காண்பிக்கிறது. தெருக்களில் நடந்து செல்லும் போது, ஸ்மார்ட்போனை முன்புறம் காண்பிக்க வேண்டும்.
சோடார் அம்சம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான கூகுள் குரோம் பிரவுசர்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் சீராக இயங்க ஸ்மார்ட்போனில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி இருக்க வேண்டும். இதற்கென வெப் எக்ஸ்ஆர் எனும் தொழில்நுட்பத்தை கொண்டு 2 மீட்டர் சமூக இடைவெளியை கணக்கிட்டு தெரிவிக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile